7 நாட்களுக்கு பிறகு இன்று கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் பகுதியை சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்கின்றனர்




வங்கக் கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடந்த ஒரு வார காலமாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. கடலோர பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தது. இதனால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியது. அதன் அடிப்படையில் புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் கடந்த 25-ந் தேதியில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் மீனவர்கள் தங்கள் படகுகளை வரிசையாக கரையில் நிறுத்தி வைத்தனர். இதையடுத்து 7 நாட்கள் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாததால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்படைந்தது. இதனால் இந்த பகுதியில் மீன்கள் தட்டுப்பாடு ஏற்பட்டது. இந்நிலையில் தற்போது இயல்பு நிலை திரும்பி உள்ளதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல மீன்வளத் துறையினர் அனுமதி அளித்துள்ளனர். அதன் அடிப்படையில் இன்று (திங்கட்கிழமை) கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் பகுதியை சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் 7 நாட்களுக்குப் பிறகு கடலுக்கு மீன் பிடிக்க செல்கின்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments