புதுக்கோட்டை அருகே விபத்தில் மூளைச்சாவு அடைந்த வாலிபர் உடல் உறுப்புகள் தானம் அரசு சார்பில் மரியாதை




புதுக்கோட்டை அருகே பழைய கந்தர்வகோட்டையை சேர்ந்தவர் கவியரசன் (வயது 20). முள்ளூர் பகுதியை சேர்ந்த ரெத்தின சபாபதியின் மகன் மணிகண்டன் (20). இவர்கள் இருவரும் தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தனர். இந்த நிலையில் சம்பவத்தன்று வேலை நிமித்தமாக மோட்டார் சைக்கிளில் 2 பேரும் சென்ற போது பழைய கந்தர்வகோட்டை பஸ் நிறுத்தம் அருகே கார் மோதியது. இதில் கவியரசன், மணிகண்டன் ஆகிய 2 பேரும் படுகாயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு மணிகண்டன் மூளைச்சாவு அடைந்தார். இந்த நிலையில் அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது பெற்றோர் சம்மதம் தெரிவித்தனர். அங்கு நேற்று மருத்துவமனையில் மணிகண்டனின் உடலில்இருந்து 2 சிறுநீரகம், கல்லீரல், தோல் உள்பட 5 உறுப்புகளை மருத்துவக்குழுவினர் தானமாக பெற்றனர். இதைத்தொடர்ந்து மணிகண்டனின் உடலை பெற்ற அவரது பெற்றோர், உறவினர்கள் நேற்று மாலை புதுக்கோட்டை அருகே முள்ளூர் கிராமத்திற்கு கொண்டு வந்தனர். அங்கு அரசு சார்பில் புதுக்கோட்டை ஆர்.டி.ஒ. ஐஸ்வர்யா மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இதில் வருவாய்த்துறை அலுவலர்கள், மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இறந்த மணிகண்டனின் உடலுக்கு இறுதி சடங்குகள் நடைபெற்று தகனம் செய்யப்பட்டன.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments