கடலுக்கு சென்ற மீனவர்கள்
வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடந்த 7 நாட்களாக புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் பகுதியை சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
இந்நிலையில் இயல்பு நிலை திரும்பியதால் மீனவர்கள் வழக்கம் போல் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். 7 நாட்கள் மீன்பிடிக்க செல்லாததால் அதிகளவு மீன்கள் கிடைக்கும் என்று மீனவர்கள் ஆர்வத்துடன் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். ஆனால் மீனவர்கள் வலையில் போதிய அளவு மீன்கள் சிக்கவில்லை.
ஏமாற்றம்
இதனால் மீனவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். 7 நாட்களுக்கு பிறகு மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் அதிகளவு மீன்கள் பிடித்து வருவார்கள் என அதிகளவு வியாபாரிகள் கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் காலை முதலே குவிந்திருந்தனர்.
ஆனால் போதிய அளவு மீன்கள் வரத்து இல்லாததால் அதிக விலை கொடுத்து மீன்களை வாங்கி சென்றனர். மீன்கள் வாங்க வந்த பொதுமக்களும் விலை அதிகமாக இருந்ததால் குறைந்த அளவு மீன்களை வாங்கிக்கொண்டு ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.