7 நாட்களுக்கு பிறகு கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர் மீனவர்கள் வலைகளில் குறைவான மீன்களே கிடைத்தன




7 நாட்களுக்கு பிறகு கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் வலைகளில் குறைவான மீன்களே கிடைத்தன.

கடலுக்கு சென்ற மீனவர்கள்

வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடந்த 7 நாட்களாக புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் பகுதியை சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

இந்நிலையில் இயல்பு நிலை திரும்பியதால் மீனவர்கள் வழக்கம் போல் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். 7 நாட்கள் மீன்பிடிக்க செல்லாததால் அதிகளவு மீன்கள் கிடைக்கும் என்று மீனவர்கள் ஆர்வத்துடன் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். ஆனால் மீனவர்கள் வலையில் போதிய அளவு மீன்கள் சிக்கவில்லை.

ஏமாற்றம்

இதனால் மீனவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். 7 நாட்களுக்கு பிறகு மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் அதிகளவு மீன்கள் பிடித்து வருவார்கள் என அதிகளவு வியாபாரிகள் கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் காலை முதலே குவிந்திருந்தனர்.

ஆனால் போதிய அளவு மீன்கள் வரத்து இல்லாததால் அதிக விலை கொடுத்து மீன்களை வாங்கி சென்றனர். மீன்கள் வாங்க வந்த பொதுமக்களும் விலை அதிகமாக இருந்ததால் குறைந்த அளவு மீன்களை வாங்கிக்கொண்டு ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments