மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை, மக்களை TNTJ மாநில, மாவட்ட நிர்வாகிகள் நேரில் பார்வையிட்டு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டார்கள்




புதுக்கோட்டை மாவட்டத்தின், கடற்கரை ஊர்களான கிருஷ்ணாஜிப்பட்டினம், வடக்கு அம்மாப்பட்டிணம், அம்மாபட்டிணம் ஆகிய பகுதிகளில் மழைநீர் சூழ்ந்து வெள்ளக்காடாகி வீடுகள், பள்ளிக்கூடம், மருத்துவமனை, பள்ளிவாசல் ஆகியவை பாதிக்கப்பட்டுள்ளன. உணவு சமைக்க முடியாமலும், வீட்டை விட்டு வெளியில் வந்து தங்கள் தேவைகளை நிறைவேற்ற முடியாமல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

மேற்படி பதிக்கப்பட்ட பகுதிகளை, TNTJ மாநிலச் செயலாளர்கள் காஞ்சி  சித்திக், ரபீக் முகம்மது மற்றும் புதுக்கோட்டை மாவட்டத் தலைவர் சித்திக் ரகுமான், மாவட்டச் செயலாளர் முகமது மீரான், துணைச் செயலாளர்கள் அப்துல் ரஹ்மான் ரஹுஃப், ஷேக் அப்துல்லாஹ் மற்றும் அந்தந்த கிளை நிர்வாகிகள் நேரில் பார்வையிட்டு, 

இதில் கிருஷ்ணாஜிப்பட்டினம், வடக்கு அம்மாப்பட்டினம் மற்றும் அம்மாப்பட்டினம் ஆகிய ஊர்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, பால், பிஸ்கட் என்று நிவாரணப் பொருள்களை சுமார் 1000 க்கும் மேற்பட்ட மக்களுக்கு TNTJ சார்பாக வழங்கப்பட்டது.

மேலும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வெள்ள நீர் வடியவும், உரிய நிவாரணங்களை வழங்கியும், போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகளை மேற்கொள்ளுமாறும், சம்பந்தப்பட்ட அரசு நிர்வாகத்திற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோரிக்கை வைக்கிறது.

இப்படிக்கு,

H.சித்திக் ரகுமான்.,B.E.,
மாவட்டத் தலைவர், 
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ), 
புதுக்கோட்டை மாவட்டம்.
8344562682.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments