புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுக்கா நாட்டானிபுரசக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட கோபாலப்பட்டிணத்தில் நெடுங்குளம் உள்ளது. இந்த குளத்தில் மழை நீரை நம்பி தான் இந்த நெடுங்குளம் உள்ளது. பல வருடங்களாக இந்த குளத்திற்கு தண்ணீர் வராமல் வாய்க்கால் அடைப்பட்டது.அதை உடனடியாக ஜமாஅத் நிர்வாகத்தின் சார்பாக நெடுங்குளத்திற்கு ஆழ்துளை கிணறு அமைத்து தண்ணீர் குளத்திற்கு விடப்பட்டது.தற்போது மழைக்காலமாக இருப்பதால் தண்ணீர் வரவேண்டிய வாய்க்காலை சரி செய்து சிமெண்ட் தூம்பு அமைக்கப்பட்டது. அதன் பிறகு அரசு அதிகாரிகளை தொடர்பு கொண்டும் கிராம நிர்வாகிகளை தொடர்பு கொண்டும் தண்ணீர் வரவேண்டிய வழிகளை சரிசெய்து தற்போது தொடரேந்தல் கண்மாயில் இருந்து நமது நெடுங்குளத்திற்கு தண்ணீர் நிரம்பி வருகிறது. குளத்திற்கு தண்ணீர் வருவதால் மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.அரசு அதிகாரிகளையும்,கிராம நிர்வாகிகளிடமும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி அதை சரியான முறையில் செயல்படுத்திய நமது கோபாலப்பட்டிணம் ஜமாத் நிர்வாகத்திற்கும் மற்றும் கமிட்டியாளர்களுக்கும் இதற்காக அல்லும் பகலும் அயராது உழைத்த அத்துனை பேருக்கும் GPM மீடியா சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்கள்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.