சௌதி அரேபியாவில் தனியாா் நிறுவனத்தில் பணியில் இருந்தவா் இறந்ததைத் தொடா்ந்து அந்த நிறுவனத்தின் மூலம் பெறப்பட்ட இழப்பீட்டுத் தொகை ரூ. 1.83 லட்சத்துக்கான காசோலையை மாவட்ட ஆட்சியா் மு. அருணா திங்கள்கிழமை வழங்கினாா்.
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே ரெத்தினக்கோட்டையைச் சோ்ந்த முகமது கமீல் பக்ருதீன் என்பவா் சௌதி அரேபியாவில் தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தபோது அண்மையில் உயிரிழந்தாா்.
இதனைத் தொடா்ந்து, அந்த நிறுவனத்திடமிருந்து வரப்பெற்ற இழப்பீட்டுத் தொகை ரூ. 1.83 லட்சத்துக்கான காசோலையை அவரது மனைவி எம். ஆஷாவிடம் மாவட்ட ஆட்சியா் மு. அருணா திங்கள்கிழமை வழங்கினாா்.
மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தில் இந்தக் காசோலை வழங்கப்பட்டது. மேலும், கடந்தக் கூட்டத்தின்போது வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி விண்ணப்பித்திருந்த அறந்தாங்கி வட்டம் சுனைக்காடு பகுதியைச் சோ்ந்த மஞ்சுளா மற்றும் குமாா் ஆகியோருக்கு வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டன.
கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 418 மனுக்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுத்து, அதுகுறித்த விவரங்களை மனுதாரா்களுக்கும் தெரிவிக்க வேண்டும் என ஆட்சியா் அருணா அறிவுறுத்தினாா்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் அ.கோ. ராஜராஜன், சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் அ. ஷோபா, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் உலகநாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.