கோட்டைப்பட்டினத்தில் வாய்க்கால் கரையோரத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஆக்கிரமிப்பு
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் பகுதியில் ஆற்று பாலம் ஒன்று உள்ளது. இந்த பகுதியில் உள்ள கண்மாய்கள், ஏரிகள், குளங்கள் நிரம்பினால் திறந்து விடப்படும் உபரி நீர் இந்த பாலத்தின் வழியாக தான் கடலுக்கு செல்லும்.
இந்த பாலத்தின் வாய்க்கால் மஞ்சக்குடியில் இருந்து தொடங்குகிறது. இந்நிலையில் வாய்க்கால் வரும் வழியில் கரையோரங்களில் உள்ளவர்கள் வாய்க்காலை அடைத்து ஆக்கிரமித்துள்ளனர். இதனால் வாய்க்கால் குறுகிவிட்டது. மேலும் அதிக மழை பெய்தால் உபரி நீர் வாய்க்காலில் செல்லாமல் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து விடுகிறது.
சாலை மறியல்
இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக வாய்க்காலில் தண்ணீர் செல்ல வழியில்லாமல் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து விட்டது. பொதுமக்கள் மிகவும் பாதிப்படைந்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் வாய்க்கால் ஓரத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி கிழக்கு கடற்கரை சாலையில் நேற்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போக்குவரத்து பாதிப்பு
இதுகுறித்து தகவல் அறிந்த மணமேல்குடி வட்டார வளர்ச்சி அலுவலர் ஆனந்த், மீமிசல் இன்ஸ்பெக்டர் மற்றும் வருவாய்த்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஒரு மாத காலத்திற்குள் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர்.
அதன்பேரில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தினால் கிழக்கு கடற்கரை சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.A
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.