போலீஸ் சூப்பிரண்டு பொறுப்பேற்பு
தமிழக காவல்துறையில் ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டது. அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக இருந்த வந்திதா பாண்டே, திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி.யாக பதவி உயர்வில் பணியிட மாறுதலில் சென்றார். அவருக்கு பதிலாக திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அபிஷேக் குப்தா, புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டார்.
இதையடுத்து அவர் நேற்று காலை புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார். புதிதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பொறுப்பேற்ற அபிஷேக் குப்தாவுக்கு கூடுதல் சூப்பிரண்டு, துணை சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.
கலந்தாய்வு கூட்டம்
போலீஸ் சூப்பிரண்டு அபிஷேக் குப்தா கடந்த 2019-ம் ஆண்டு ஐ.பி.எஸ். பணியில் சேர்ந்தார். தூத்துக்குடி, விழுப்புரம் மாவட்டங்களில் உதவி போலீஸ் சூப்பிரண்டாகவும், திருப்பூர் மாநகர போலீஸ் துணை கமிஷனராகவும் பணியாற்றிருக்கிறார்.
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பொறுப்பேற்ற அபிஷேக் குப்தா முதல் நாளிலே நேற்று காவல்துறை அதிகாரிகளுடன் கலந்தாய்வு கூட்டம் நடத்தினார். இதில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு, துணை சூப்பிரண்டுகள், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர். இதில் போலீசார் சிறப்பாக பணிபுரியவும், சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு துணை போக கூடாது என போலீஸ் சூப்பிரண்டு அபிஷேக் குப்தா அறிவுறுத்தினார். முன்னதாக போலீஸ் சூப்பிரண்டு அபிஷேக் குப்தாவுக்கு காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை அளிக்கப்பட்டது.
51-வது போலீஸ் சூப்பிரண்டு
புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 1974-ம் ஆண்டு முதல் இதுவரை 50 போலீஸ் சூப்பிரண்டுகள் பணியாற்றியுள்ளனர். தற்போது 51-வது போலீஸ் சூப்பிரண்டாக அபிஷேக் குப்தா நேற்று பொறுப்பேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.