கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் 362 மனுக்கள் பெறப்பட்டன




புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 362 மனுக்கள் பெறப்பட்டன.

362 மனுக்கள்

புதுக்கோட்டை மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் அருணா தலைமை தாங்கினார். கூட்டத்தில் பொதுமக்கள் பலர் கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்தனர். கூட்டத்தில் மொத்தம் 362 மனுக்கள் பெறப்பட்டன.

அதனை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க கலெக்டர் அருணா உத்தரவிட்டார். இதற்கிடையில் பட்டா கோரி விண்ணப்பித்து மனு கொடுத்து நடவடிக்கை எடுக்கப்படாததை கண்டித்து கீரமங்கலத்தை சேர்ந்த சரவணன் என்பவர் தனது குடும்பத்துடன் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். அவரை பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் எச்சரித்து மனு கொடுக்க அறிவுறுத்தி அழைத்து சென்றனர்.

சுழற்கோப்பை

மேலும், தாட்கோ மூலம் தமிழ்நாடு தூய்மை பணியாளர் நலவாரியத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள 15 தூய்மைப் பணியாளர்களின் வாரிசு தாரர்களுக்கு, ரூ.19,500 மதிப்பிலான கல்வி உதவித்தொகைக்கான காசோலைகள் வழங்கப்பட்டது.

மேலும், பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களின் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தீர்வு காணப்பட்டதன் அடிப்படையில், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் வேல்முருகனுக்கு சுழற்கோப்பையினை பரிசாக வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. கூட்டத்தில், கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) அப்தாப் ரசூல், மகளிர் திட்ட இயக்குனர் ஸ்ருதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments