மணமேல்குடியில் சமுதாய வளைகாப்பு விழா




மணமேல்குடி தனியார் திருமண மண்டபத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு மணமேல்குடி முன்னாள் ஒன்றிய குழுத்தலைவர் பரணி கார்த்திகேயன் தலைமை தாங்கினார். திட்ட அலுவலர் வசந்தி முன்னிலை வகித்தார். இதையடுத்து 200-க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகளுக்கு மாலை அணிவித்து, சந்தனம் பூசி, வளையல்கள் அணிவித்து வளைகாப்பு நடத்தப்பட்டது. பின்னர் அவர்களுக்கு சீர் வரிசை பொருட்கள் வழங்கப்பட்டன. மேலும் ஆரோக்கியமான குழந்தைகளை பெற்றெடுக்க கர்ப்ப காலத்தில் கடைபிடிக்க வேண்டிய சுகாதார முறை மற்றும் உணவு முறை குறித்து கர்ப்பிணிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments