மணமேல்குடியில் கலால் துறை சார்பில் சாராயம் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி மற்றும் ஊர்வலம் நடைபெற்றது. நிகழ்ச்சியை தாசில்தார் பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார். இதில் கலைஞர்கள், கள்ளச்சாராயம் குறித்து பிரசார பாடலின் மூலம் விளக்கினர். இதில், கள்ளச்சாராயம் அருந்துவதால் நோய் எதிர்ப்பு சக்தி குறையும், மாரடைப்பு ஏற்பட்டு உடனடி மரணம் சம்பவிக்கும், நரம்புத்தளர்ச்சி, கை மற்றும் கால் நடுக்கம் உண்டாகும். பணக் கஷ்டம் ஏற்படும், குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் ஏற்பட வாய்ப்பாகும். உறவினர் சுற்றத்தாரின் உறவுகள் பாதிக்கப்படும், பிள்ளைகளின் வெறுப்புக்கு ஆளாக நேரிடும். குடும்பத்திற்கு நிரந்தர அவப்பெயர் ஏற்படும், குடிப்பழக்கம் குடும்பத்தை சீரழிக்கும், உடல்நிலையை பாதிக்கும் என்ற கருத்துகளை வலியுறுத்தி விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர். தொடர்ந்து விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. இதில் கோட்ட கலால் அலுவலர் பரணி, தனி வருவாய் ஆய்வாளர் முத்தரசு, கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டு ஊர்வலமாக சென்று கள்ளச்சாரயம் குறித்து பதாகைகளை கையில் ஏந்தியவாறு பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்்படுத்தினர்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.