மணமேல்குடி அருகே கடல் பசுவை வேட்டையாடிய நபர்கள் அதிகாரிகள் விசாரணை




கடலில் அரிய உயிரினமான கடல் பசு வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் படி பாதுகாக்கப்பட வேண்டிய உயிரினமாகும். அதனால் கடல் பசுவை பிடிக்கவோ, விற்கவோ, அதனை பிடித்து சமைத்து உண்ணவோ கூடாது. இதனை மீறினால் வன உயிரின பாதுகாப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் மீனவர்கள் வலையில் கடல் பசு சிக்கினால் அதனை கடலில் உயிருடன் விட்டு விட வேண்டும். அவ்வாறு சிக்கிய கடல் பசுவை விடுவிக்கும் மீனவர்களுக்கு பாராட்டு சான்றிதழும், வெகுமதியும் அரசால் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகே கடலில் மீன்பிடிக்க சென்றதில் கடல் பசுவை சிலர் வேட்டையாடியுள்ளனர். இது தொடர்பாக வனத்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, விசாரணை நடைபெற்று வருவதாகவும், விசாரணை முடிந்ததும் கைதானவர்கள் பெயர் விவரம் தெரிவிக்கப்படும் என்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments