பேட்டரி கார்
புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக வரும் புற நோயாளிகள் மற்றும் உள்நோயாளிகளை பார்வையிட வரும் பார்வையாளர்கள் என பொதுமக்களுக்காக பேட்டரி கார் இயக்கப்பட்டது. மருத்துவமனை நுழைவுவாயிலில் இருந்து மருத்துவமனை உள் பகுதியில் உள்ள புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு மற்றும் வளாகம் வரை பொதுமக்கள் நடந்து வருவதில் சிரமம் ஏற்படுவதை தடுக்க இந்த பேட்டரி கார் இருந்தது. இதில் இலவசமாக பொதுமக்கள் பயணித்து வந்தனர். மருத்துவமனை வளாகத்தில் இருந்து நுழைவுவாயில் வரையும், அங்கிருந்து மீண்டும் வளாகம் வரையும் இலவசமாக இயக்கப்பட்டது. இந்த பேட்டரி கார் சேவை பொதுமக்களுக்கு பயனுள்ளதாக இருந்தது. இந்த நிலையில் இடையில் இந்த பேட்டரி கார் சேவை நிறுத்தப்பட்டது. இதனை மீண்டும் இயக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
பொதுமக்கள் கோரிக்கை
இந்த நிலையில் தற்போது இந்த பேட்டரி கார் சேவை மீண்டும் தொடங்கியுள்ளது. புறநோயாளிகள் பிரிவு பார்வை நேரமான காலை நேரத்தில் மட்டும் இந்த பேட்டரி கார் இயங்குகிறது. காலை 8 மணி முதல் மதியம் 12.30 மணி வரை இயக்கப்படுகிறது.
இதில் டிரைவர் ஒருவர் பணியில் இருந்து இயக்கி வருகிறார். இந்த பேட்டரி கார் சேவை பொதுமக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. இதனை மாலை வரையும் தொடர்ந்து இயக்க வேண்டும் என பொதுமக்கள் சிலர் கோரிக்கை விடுக்கின்றனர். மதியம் நேரத்திற்கு பிறகும் பார்வையாளர்கள், பொதுமக்கள் வருகை இருப்பதால் இந்த பேட்டரி கார் இயக்கினால் அவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். நடந்து செல்வதில் சற்று சிரமம் குறையும்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.