கட்டுமாவடி முதல் ஏனாதி வரை நாட்டுப்படகுகளை அதிகாரிகள் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர்.
விசைப்படகுகள்
புதுக்கோட்டை மாவட்டத்தில் கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினத்தில் இருந்து விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்று வருகின்றனர். இதேபோல கட்டுமாவடி முதல் ஏனாதி வரை 32 மீனவ கிராமங்களில் நாட்டுப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடித்து வருகின்றனர்.
ஆண்டுதோறும் விசைப்படகுகள், நாட்டுப்படகுகளை அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்வது வழக்கம். அந்த வகையில் விசைப்படகுகளை கடந்த 15-ந் தேதி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். தற்போது மீன்பிடி தடைக்காலம் என்பதால் விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. அதனால் ஆய்வு பணியில் விசைப்படகுகளை அதிகாரிகள் தடையில்லாமல் பார்வையிட்டனர்.
நாட்டுப்படகுகள்
இந்த நிலையில் நாட்டுப்படகுகளை நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) மீன்வளத்துறை அதிகாரிகள் சிறப்பு குழு மூலம் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். நாட்டுப்படகு உரிமையாளர்களின் அடையாள அட்டை, படகு பதிவு சான்றிதழ், டீசல் மானிய அட்டை, குடும்ப அட்டை உள்ளிட்டவற்றையும், படகுகளையும் பார்வையிடுவார்கள்.
மேலும் ஆய்வின் போது ஆவணங்களை மீனவர்கள் சமர்ப்பிக்க வேண்டும். நாட்டுப்படகு மீனவர்கள் தற்போது கடலுக்கு மீன்பிடிக்க சென்று வருகின்றனர். நாளை மறுநாள் ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளதால் நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அதிகாரிகள் ஏற்கனவே அறிவுறுத்தியுள்ளனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.