ஆர்.புதுப்பட்டினம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளையின் சார்பாக கோடைகால வகுப்பு பரிசளிப்பு நிகழ்ச்சி




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் ஆர்.புதுப்பட்டினம் கிளையின் சார்பாக கோடைகால நல்லொழுக்க பயிற்சி முகாம் நிறைவு அடைந்ததை முன்னிட்டு மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது. 

தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் முடிந்த நிலையில் மே மாதம் முழுவதும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது பெரும்பாலான பள்ளி மாணவர்கள் செல்போனில் மூழ்கியுள்ளனர் .
இந்த நிலையில் பள்ளி மாணவர்களின் விடுமுறையை பயனுள்ளதாக கழிக்கவும் செல்போனுக்கு அடிமையாவதை தடுக்கவும் ,பள்ளி மாணவ மாணவிகளுக்கு நல்லொழுக்கத்தை கற்றுக் கொடுக்கவும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் பேரியக்கம் சார்பில்  தமிழகம் முழுவதும் நல்லொழுக்க பயிற்சி முகாம் நடத்தப்பட்டது .அதன் ஒரு பகுதியாக  R.புதுப்பட்டினத்தில் மே மாதம் 13 தேதி ஆரம்பிக்கப்பட்டு 23ஆம் தேதி வரை பத்து நாட்கள் நடைபெற்றது .

இந்த பயிற்சி வகுப்பில் இஸ்லாமிய கல்வி மற்றும் நல்லொழுக்க பயிற்சிகள் வழங்கபட்டது.

நிகழ்ச்சியின் இறுதியாக கலந்து கொண்ட மாணவர்களுக்கு 25.5.25 அன்று பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. 

இதில் மாவட்ட மாணவரணி செயலாளர் ரஹ்மத்துல்லாஹ் MISC அவர்கள் தலைமை வகித்தார்.

இதில் கிளை நிர்வாகிகள் அமீர் பாட்சா,ஹம்தன் ரசீது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments