மத்திய மீன் ஆராய்ச்சி நிலையம் சார்பில் மீன்வளத்தை பெருக்குவதற்காக லட்சக்கணக்கான இறால் குஞ்சுகள் கோட்டைப்பட்டினம் பகுதியில் கடலில் விடப்பட்டன.
கடல் மீன் ஆராய்ச்சி நிலையம்
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கடல் மீன் ஆராய்ச்சி நிலையம் இயங்கி வருகிறது. அங்கு ஆராய்ச்சியாளர்கள், விஞ்ஞானிகள் கடல் மீன் வளத்தை பெருக்கவும், மீனவர்களின் வாழ்வாதாரத்தை பெருக்கவும் ஆராய்ச்சிகள் மேற்கொண்டு நடைமுறைப்படுத்தி வருகின்றனர்.
மேலும் இறால், நண்டு உள்பட மீன் குஞ்சுகளை உருவாக்கி கடலில் விட்டு வருகின்றனர். மேலும் கூண்டு அமைத்து மீன் வளர்ப்பில் ஈடுபடுபவர்களுக்கும் மீன் குஞ்சுகளை வழங்கியும் வருகின்றனர். அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் சுமார் 42 கிலோ மீட்டர் தூரம் கடற்கரை பகுதியை கொண்டதாகும். பாக்ஜலசந்தி கடல் பகுதியை கொண்டதில் நாட்டுப்படகு மற்றும் விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்று வருகின்றனர்.
இறால் மீன் குஞ்சுகள்
இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்ட கடற்கரை பகுதிகளில் கடலில் மீன் வளத்தை பெருக்க மத்திய மீன் ஆராய்ச்சி நிலையம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக லட்சக்கணக்கான இறால் குஞ்சுகளை கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம் உள்ளிட்ட இடங்களின் அருகே கடலில் விட்டனர். இதற்காக இறால் மீன் குஞ்சுகளை தண்ணீர் நிரப்பட்ட கேன்களில் கொண்டு வந்தனர்.
அதனை படகில் எடுத்து சென்று கடலில் சிறிது தூரம் தள்ளி விட்டனர். இது தொடர்பாக மீன் ஆராய்ச்சி நிலைய வட்டாரத்தினர் கூறியதாவது:-இந்த இறால் குஞ்சுகள் கடலில் வளர்ந்து பெருகும். இறால் குஞ்சுகள் பவளப்பாறைகள், கடல் தாழைகள் உள்ளிட்டவற்றில் தஞ்சமடைந்து வளரும்.
வாழ்வாதாரம்
குஞ்சாக இருக்கிற போது மீனவர்கள் வலையில் சிக்காது. விட்டப்பட்ட குஞ்சுகளில் பலவை வளர்ந்து பெருகும். அப்போது மீனவர்கள் வலையில் இறால் மீன்கள் சிக்குவது மீனவர்களுக்கு வாழ்வாதாரமாக அமையும்.
மீன் வள ஆராய்ச்சி நிலையத்தில் மீன் குஞ்சுகள் உற்பத்திக்கு பிரத்யேகமாக உள்ளது. எந்த பகுதியில் மீன் வளம் குறைவாக இருக்கிறதோ? அங்கு மீன் குஞ்சுகள் விடப்படுகிறது.
இவ்வாறு கூறினர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.