மணமேல்குடி ஒன்றியம் வடக்கூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கான சிறப்புப் பயிற்சி




மணமேல்குடி  ஒன்றியம்  வடக்கூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில்  பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கான சிறப்புப் பயிற்சி நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் வழிகாட்டுதலின்படி மற்றும் மணமேல்குடி வட்டார கல்வி அலுவலர்கள் மதிப்புக்குரிய திருசெழியன் மற்றும் திருமதி அமுதா அவர்களின் வழிகாட்டுதலின்படி மணமேல்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட வடக்குர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கான சிறப்பு பயிற்சி மணமேல்குடி வட்டார வளமைய மேற்பார்வையாளர் பொறுப்பு திருமதி சிவயோகம் தலைமையில் தொடங்கியது.

 இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் மதிப்புக்குரிய திருமதி தாமரைச்செல்வி அவர்கள் அனைவரையும் வரவேற்று பேசினார். மாவட்ட பள்ளி மேலாண்மை குழு கருத்தாளர் மதிப்புக்குரிய திரு சங்கர் அவர்கள் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கான பயிற்சியினை  வழங்கினார்.

 இந் நிகழ்வில் பள்ளி மேலாண்மை குழு மூலம் பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகளை எவ்வாறு செய்வது, பள்ளிக்கும் மாணவர்களுக்கும் தேவையான அடிப்படை வசதிகளை எவ்வாறு செய்து கொடுப்பது, அதேபோல் மாவட்ட அளவில் மாநில அளவில் இப்பள்ளியினை சிறந்த பள்ளியாக எவ்வாறு மாற்றுவது மற்றும் பள்ளி மேலாண்மை குழுவின் நோக்கங்கள் செயல்பாடுகள்  குறித்த கருத்துக்களை எடுத்துக் கூறினார்கள்.

 இந்நிகழ்வில் பள்ளி மேலாண்மை குழுவின் தலைவி திருமதி புஷ்பம் துணைத்தலைவி திருமதி பிரியதர்ஷினி பள்ளி ஆசிரியர்கள் திருமதி பிரியதர்ஷினி திருமதி கொடியரசி மற்றும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

 இதேபோல் பள்ளி மேலாண்மை குழு சிறந்த பள்ளிகளுக்கான மணமேல்குடி ஒன்றியத்தில்  தொடக்கப் பள்ளிகள் பானாவயல், கோட்டைப்பட்டினம் பெண்கள், கிருஷ்ணாஜி பட்டினம்  கோட்டைப்பட்டினம் ஆண்கள்,  புதுக்குடி,  கட்டுமாவடி, நடுநிலை பள்ளிகள் மேலஸ்தானம் கோட்டைப்பட்டினம் மீனவர் காலனி  ஒன்பது பள்ளிகளுக்கு இப்பயிற்சி வழங்கப்பட உள்ளது.






எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments