அறந்தாங்கி அருகே பரபரப்பு மாட்டை தேடி சென்ற பெண் கொலை போலீசார் விசாரணை




புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே காரணிக்காடு பகுதியை சேர்ந்தவர் ஜலாலுதீன். இவரது மனைவி பர்வீன் (வயது 41). ஜலாலுதீன் இறந்து விட்டார். இந்நிலையில் பர்வீன் தனது 2 மகள்களுடன் வசித்து வருகிறார். பர்வீன் தினந்தோறும் ஆடு, மாடுகளை வளர்த்து பிழைப்பு நடத்தி வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை தனது வீட்டில் கட்டியிருந்த மாட்டை காணவில்லை. இதையடுத்து மாட்டை தேடி பர்வீன் சென்றார். ஆனால் வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரை அவரது மகள்கள் மற்றும் உறவினர்கள் பல்ேவறு இடங்களில் ேதடி பார்த்தும் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து பர்வீன் மகள்கள் நாகுடி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

பெண் கொலை

இந்நிலையில் நேற்று காரணிக்காடு அடுத்துள்ள கருங்குழிக்காடு கண்மாயில் பர்வீன் உடலில் கல்லை கட்டியபடி நிர்வாண நிலையில் இறந்து கிடந்தார். இதைப்பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து நாகுடி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில், போலீசார் விரைந்து வந்து பர்வீன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பர்வீன் உடலில் ரத்தக் காயங்கள் இருந்ததால் அவரை யாரேனும் அடித்து கொலை செய்தார்களா? அல்லது கற்பழித்து கொலை செய்து கல்லை கட்டி கண்மாயில் போட்டு சென்றனரா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கிடையே திருச்சி சரக டி.ஐ.ஜி. வருண்குமார் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆர்ப்பாட்டம்

அறந்தாங்கி அருகே மாட்டை தேடி சென்ற பெண் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். இதில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும். மேலும் இறந்த பெண்ணின் மகள்களின் நலனை கருதி அவர்களுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் நாகுடி கடைவீதியில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments