புதுக்கோட்டை மாவட்டத்தில், "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாம் நாளை (வியாழக்கிழமை) நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நாளை 6 இடங்களில் இம்முகாம் நடைபெற உள்ளது. இதில் புதுக்கோட்டை மாநகராட்சி, 5 மற்றும் 6 வார்டு பகுதிகளை சேர்ந்த பொதுமக்களுக்கு திருக்கோகர்ணம், கோவில்பட்டி சமுதாயக்கூடத்திலும், அறந்தாங்கி நகராட்சி, 3, 4 மற்றும் 5 வார்டு பகுதிகளை சேர்ந்த பொதுமக்களுக்கு பட்டுக்கோட்டை சாலையில் உள்ள ராஜேஸ்வரி மகாலிலும், அன்னவாசல் பேரூராட்சி பகுதி பொதுமக்களுக்கு சிவன் கோவில் அருகில் உள்ள சமுதாயக்கூடத்திலும் நடைபெற உள்ளது.
இதேபோல பொன்னமராவதி - 2 ஊராட்சி ஒன்றிய பகுதி பொதுமக்களுக்கு காரையூர் ஸ்ரீ குரு ராகவேந்திரா திருமண மண்டபத்திலும், ஆவுடையார்கோவில் - 2 ஊராட்சி ஒன்றிய பகுதி பொதுமக்களுக்கு தொண்டைமானேந்தல் பாலகிருஷ்ணன் மகாலிலும், விராலிமலை - 3 ஊராட்சி ஒன்றிய பகுதி பொதுமக்களுக்கு கல்குடி ஊராட்சி, கிராம சேவை மையக் கட்டிடத்திலும் நடைபெற உள்ளது. மேற்கண்ட முகாம்களில் பொதுமக்கள் தங்களது விண்ணப்பங்களை அளித்து பயன்பெறலாம் என கலெக்டர் அருணா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.