ஆவுடையார்கோவிலில் அண்ணன்-தம்பி படுகொலை சம்பவம் தொடர்பாக தேசிய ஆதிதிராவிடர் ஆணைய தலைவர் கிஷோர் மக்வானா விசாரணை நடத்தினார்.
இரட்டை கொலை சம்பவம்
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவிலில் கடந்த 24-ந் தேதி அன்று அண்ணன், தம்பியான கண்ணன் மற்றும் கார்த்திக் 2 பேர் வெட்டி படுகொலை செய்யப்பட்டனர். இந்த இரட்டை கொலை சம்பவம் தொடர்பாக ஆவுடையார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலை வழக்கு தொடர்பாக 8 பேர் போலீசில் சரண் அடைந்தனர். அவர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் இரட்டை கொலை சம்பவம் தொடர்பாக தேசிய ஆதிதிராவிடர் ஆணைய தலைவர் கிஷோர் மக்வானா ஆவுடையார்கோவிலில் நேற்று விசாரணை நடத்தினார். கொலை சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்டார். மேலும் கொலையானவர்களின் வீட்டிற்கு சென்று அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். மேலும் அவர்களிடம் குறைகள், கோரிக்கைகளை கேட்டறிந்தார்.
கடும் தண்டனை
அண்ணன், தம்பியை கொலை செய்த வழக்கில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பதாகவும், அவர்களை கைது செய்யவும், சட்ட விரோத செயல்களை தட்டிக்கேட்டதால் 2 பேரும் கொலை செய்யப்பட்டுள்ளதாவும், கொலையாளிகளுக்கு கடும் தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்க குடும்பத்தினர் வலியுறுத்தினர். அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணைய தலைவர் கிஷோர் மக்வானா தெரிவித்தார்.
மேலும், இதுபோன்ற நிகழ்வுகள் இனி வரும்காலங்களில் ஏற்படாத வகையில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள தொடர்புடைய அரசு அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார். ஆணைய தலைவருடன் ஆணைய தனிச் செயலாளர் கவுரங் சாவ்தா, ஆணைய இயக்குனர் ரவிவர்மன், மாவட்ட கலெக்டர் அருணா, போலீஸ் ஐ.ஜி. சாமுண்டீஸ்வரி, துணை இயக்குனர் ஸ்டாலின், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அபிஷேக்குப்தா உள்பட அதிகாரிகள் உடன் இருந்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.