உங்கள் எஸ்.ஐ.ஆர். படிவம் தேர்தல் ஆணைய இணையதளப் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுவிட்டதா?... இதனை சில எளிய வழிமுறைகளைப் பின்பற்றி அறிந்துகொள்ளலாம்.
தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த படிவத்தை ( எஸ்.ஐ.ஆர்.,) பூர்த்தி செய்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் (பி.எல்.ஓ.,) வழங்க வேண்டும்.
நாம் வழங்கிய படிவங்களை தேர்தல் ஆணையத்தின், வாக்காளர் சேவை பக்கத்தில் (VOTERS’ SERVICE PORTAL) வாக்குச்சாவடி நிலை அலுவலர் பதிவேற்றம் செய்வார்.
அவர் பதிவேற்றம் செய்துவிட்டாரா? இல்லையா? என்பதை பின்வருமாறு அறிந்துகொள்ளலாம்.
முதலில் voters.eci.gov.in/login என்ற இணையதளப் பக்கத்திற்குச் செல்ல வேண்டும்.
பெயர், செல்போன் எண், கொடுத்து சைன்-அப் (Sign-Up) செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால், மொபைல் எண்ணுக்கு ஓடிபி அனுப்பப்படும். அந்த எண்ணை உள்ளீடு செய்ய வேண்டும்.
(ஒருமுறை சைன்-அப் செய்தால், அடுத்தடுத்த முறைகளுக்கு லாக்-இன் செய்துகொள்ளலாம்)
பின்னர், எஸ்ஐஆர் 2026 பகுதியில் உள்ள Fill Enumeration Form என்ற பகுதிக்குச் சென்று கிளிக் செய்ய வேண்டும்.
இதில், வாக்காளரின் மாநிலம் மற்றும் வாக்காளர் அடையாள அட்டையின் எண் கேட்கப்படும். அவற்றைக் கொடுக்க வேண்டும்.
நீங்கள் கொடுத்த விவரம் சமர்ப்பிக்கப்பட்டு இருந்தால், ''Submitted'' என்று காட்டும்.
அப்படி இல்லாமல், "ஆதார் படிவத்தை சமர்ப்பிக்கவும்" என்று காட்டினால், வாக்குச்சாவடி நிலை அலுவலர் உங்கள் படிவத்தை இன்னும் சப்மிட் செய்யவில்லை என்று பொருள்.
இப்பக்கத்திலேயே வாக்குச்சாவடி நிலை அலுவலரின் பெயர் மற்றும் அவரின் தொலைபேசி எண் காட்டும். அதில் தொடர்புகொண்டு விவரங்களை அறியலாம்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.