டிட்வா புயல் - மீமிசல் ஊராட்சி பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு



தமிழக அரசின் வானிலை ஆய்வு தகவலின் பேரில், புதுக்கோட்டை மாவட்டத்திற்கு இன்று மற்றும் நாளை புயல், அதி கன மழை ஏற்படும் வாய்ப்புள்ளதாக ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, மீமிசல் ஊராட்சி பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பு காரணங்களுக்காக வெளியில் செல்வதை தவிர்த்து, தங்களது வீடுகளில் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மேலும், தங்களது வீட்டு பகுதிகளில் மழைநீர் தேங்குதல் அல்லது பாதுகாப்பாக தங்க முடியாத நிலை ஏற்பட்டால், மீமிசல் பேரிடர் மேலாண்மை கட்டிடத்தில் தங்கிக் கொள்ளலாம். அங்கு பொதுமக்கள் தங்குவதற்கு தேவையான அனைத்துவித வசதிகளும் தயார் நிலையில் உள்ளன.

அவசர உதவி தொடர்புக்கு:
📞 கிராம நிர்வாக அலுவலர்: 97885 56873
📞 ஊராட்சி செயலர்: 93840 76059
📞 கிராம உதவியாளர்: 97883 50655

பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்புடன் இருந்து, தேவையான சமயங்களில் மேற்கண்ட எண்களில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இப்படிக்கு,
தனி அலுவலர்,
மீமிசல் ஊராட்சி.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments