டிட்வா புயல் - அறந்தாங்கி வர்த்தக சங்கத்தின் முக்கிய அறிவிப்பு!



அறந்தாங்கி வர்த்தக சங்க உறுப்பினர்கள், சுற்றுவட்டார பொதுமக்கள் மற்றும் கடலோரப் பகுதிகளில் வசிக்கும் அனைவருக்கும் டிட்வா புயல் சம்பந்தமான முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தற்சமயம் அறந்தாங்கி, மணமேல்குடி, கோட்டைப்பட்டினம், மீமிசல், கட்டுமாவடி உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் புயலின் தாக்கம் அதிகமாக காணப்படும் என்று வானிலைத் துறையின் எச்சரிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன.

இந்த புயல் நிலைமையின் காரணமாக பொதுமக்களுக்கு மருத்துவ உதவி அல்லது அவசரகால ஆம்புலன்ஸ் தேவையென்றால், சேவை நோக்கத்துடன் செயல்படும் அறந்தாங்கி வர்த்தக சங்கத்தின் ஆம்புலன்ஸை முற்றிலும் இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம்.

மேலும், தண்ணீர் அல்லது உணவு தேவைகள் ஏற்பட்டாலும் எப்போது வேண்டுமானாலும் எங்களை தொடர்பு கொள்ளலாம். இந்த கடின நேரத்தில் மக்களுக்கு உதவுவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்.

– தலைவர்,
அறந்தாங்கி வர்த்தக சங்கம் 🙏🙏🙏

அவசர தொடர்பு எண்கள்:
📞 99650 17711
📞 86376 81272
📞 99659 77779
📞 86828 45244

புயல் காலத்தில் பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டுகிறோம்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments