வேலை தேடுவோருக்கு நற்செய்தி: ஆலங்குடியில் நாளை மறுநாள் தனியார் வேலைவாய்ப்பு முகாம்!



புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) ஆகியவை இணைந்து மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்தவுள்ளன.

முகாம் விவரங்கள்:

  • நாள்: 13/12/2025 நாளை மறுநாள் (சனிக்கிழமை)

  • நேரம்: காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை

  • இடம்: ஆலங்குடி, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகம்.

நிறுவனங்கள் மற்றும் பணியிடங்கள்:

இம்முகாமில், தொழில்துறை, சேவைத்துறை, விற்பனைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சார்ந்த 100-க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் பங்கேற்கவுள்ளன. இந்த நிறுவனங்கள் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கு தகுதியுள்ள நபர்களைத் தேர்வு செய்ய உள்ளனர்.

மேலும், மாவட்டத்தில் உள்ள திறன் பயிற்சி நிறுவனங்களும் முகாமில் பங்கேற்று, இலவச திறன் பயிற்சிகளுக்கு ஆட்களைத் தேர்வு செய்ய உள்ளனர்.

பங்கேற்பதற்கான தகுதிகள்:

  • வயது வரம்பு: 18 முதல் 40 வயதிற்குட்பட்ட வேலைநாடும் இளைஞர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி இளைஞர்கள்.

  • கல்வித் தகுதி: 8-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை, ஐ.டி.ஐ, டிப்ளமோ, பி.இ. மற்றும் நர்சிங் படிப்புகள் முடித்தவர்கள்.

கொண்டு வர வேண்டியவை:

வேலைநாடும் இளைஞர்கள் தங்களது சுயவிவரக் குறிப்பு (Resume), ஆதார் அட்டை, பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் கல்விச் சான்று நகல்களுடன் முகாமில் கலந்து கொண்டு பயனடையலாம் என மாவட்ட ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார்.

 
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments