புதுக்கோட்டையில் நாளை (ஜன.23) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்: ஆட்சியர் அருணா தகவல்!



புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த படித்த மற்றும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்குத் தனியார் துறைகளில் பணி வாய்ப்புகளை வழங்கும் நோக்கில், சிறிய அளவிலான வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

முகாம் விவரங்கள்
இம்முகாம் வரும் ஜனவரி 23-ம் தேதி அன்று புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறுகிறது. காலை 10 மணி முதல் தொடங்கும் இந்த முகாமில் 15-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் மற்றும் திறன் பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் பங்கேற்று தங்களுக்குத் தேவையான நபர்களைத் தேர்வு செய்ய உள்ளன.

தகுதிகள்
கல்வித்தகுதி 
10-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ (ITI), டிப்ளமோ (Diploma) போன்ற தகுதியுடையவர்கள் பங்கேற்கலாம்.
 
வயது வரம்பு 
18 முதல் 35 வயதிற்குட்பட்ட வேலை தேடும் இளைஞர்கள்.

தேவையான ஆவணங்கள்
முகாமிற்கு வரும் இளைஞர்கள் தங்களது சுயவிவரக் குறிப்பு (Resume), ஆதார் அட்டை நகல் மற்றும் கல்விச்சான்று நகல்கள் ஆகியவற்றுடன் நேரில் கலந்துகொண்டு பயன்பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வேலைவாய்ப்பு தேடும் இளைஞர்கள் தமிழக அரசின் தனியார் துறை வேலைவாய்ப்பு இணையதளமான www.tnprivatejobs.tn.gov.in என்ற முகவரியில் தங்களது விவரங்களைப் பதிவு செய்துகொள்ளுமாறு புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அருணா அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்.
 
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments