புதுக்கோட்டை மாவட்டம், நாட்டாணி புரசக்குடி ஊராட்சியில் நாளை (ஜனவரி 26) குடியரசு தினத்தை முன்னிட்டு நடைபெறவுள்ள கிராம சபை கூட்டத்தில், கோபாலப்பட்டிணம் பகுதி மக்கள் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டும் என முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர் அ.சாதிக் பாட்ஷா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கிராமத்தின் 'நாடாளுமன்றம்'
கிராம சபை என்பது வெறும் கூட்டம் மட்டுமல்ல, அது நம் கிராமத்தின் 'நாடாளுமன்றம்'. நம் ஊருக்குத் தேவையான திட்டங்கள் மற்றும் வளர்ச்சிப் பணிகளை நாமே தீர்மானிக்கும் மிக உயர்ந்த அதிகாரம் இந்தச் சபைக்கு உண்டு. நாம் அமைதியாக இருந்தால், நம் ஊரின் அத்தியாவசியத் தேவைகள் கவனிக்கப்படாமலேயே போகக்கூடும்.
உரிமைகளை நிலைநாட்ட வாருங்கள்
நம் வீட்டின் முன்னேற்றத்தைப் போலவே நம் ஊரின் முன்னேற்றமும் முக்கியமானது. தூய்மையான குடிநீர், சீரான சாலை வசதிகள் மற்றும் தெருவிளக்குகள் போன்றவை நமது அடிப்படை உரிமைகள். இந்த உரிமைகளை நிலைநாட்டவும், ஊராட்சி நிர்வாகத்தில் கோபாலபட்டினம் கிராமத்தின் குரலை ஓங்கி ஒலிக்கச் செய்யவும் பொதுமக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.
கூட்ட விவரம்
இடம்: நாட்டாணி
நேரம்: நாளை (ஜனவரி 26) காலை 11:00 மணி
"உங்கள் ஒரு மணி நேர ஒதுக்கீடு, நம் ஊரின் அடுத்த ஓராண்டு வளர்ச்சியைத் தீர்மானிக்கும். எனவே, கோபாலபட்டினத்தை உயர்த்த அனைவரும் மறவாமல் வாரீர்!" என அவர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இவண்
அ.சாதிக் பாட்ஷா
முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர்,
நாட்டாணி புரசக்குடி ஊராட்சி, புதுக்கோட்டை மாவட்டம்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.