அறந்தாங்கியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மற்றும் அரசு மருத்துவமனை இணைந்து நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்த முகாமிற்கு, தவ்ஹீத் ஜமாஅத் மாவட்டச் செயலாளர் வெட்டிவயல் மீரான் தலைமை தாங்கினார். கிளைத் தலைவர் தாரிக் இப்ராஹிம், துணைத் தலைவர் தாஜ்தீன், செயலாளர் ஜமீன் இப்ராஹிம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அறந்தாங்கி காவல் துணை கண்காணிப்பாளர் (DSP) பி. சரவணன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு, முகாமினைத் தொடங்கி வைத்து இரத்தக் கொடையாளர்களைப் பாராட்டினார்.
முகாமில் நூற்றுக்கணக்கான ஆண்களும், பெண்களும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு இரத்ததானம் வழங்கினர். இதில் மருத்துவத் தகுதி அடிப்படையில் 51 யூனிட் இரத்தம் சேகரிக்கப்பட்டு, அறந்தாங்கி அரசு மருத்துவமனை இரத்த வங்கியிடம் ஒப்படைக்கப்பட்டது.
இரத்தம் வழங்கியவர்களுக்கு அரசு மருத்துவர் ஹேமலதா பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.
நிகழ்ச்சியின் நிறைவாக, மாவட்ட மருத்துவ அணி செயலாளர் சபிபுல்லா நன்றி கூறினார். "ஒரு மனிதரை வாழவைத்தவர், ஒட்டுமொத்த மனிதகுலத்தையே வாழவைத்தவர் ஆவார்" எனும் குர்ஆன் வசனத்தின் அடிப்படையில் இந்தச் சேவை முன்னெடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். முகாம் ஏற்பாடுகளைத் தவ்ஹீத் ஜமாஅத் கிளை நிர்வாகிகள் மற்றும் தொண்டரணியினர் செய்திருந்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia


0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.