தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டிற்கான இறுதி வாக்காளர் பட்டியலை இந்திய தேர்தல் ஆணையம் நேற்று (பிப்ரவரி 23) வெளியிட்டது. இதன் ஒரு பகுதியாக, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில், மாவட்ட தேர்தல் அலுவலரும் ஆட்சியருமான அருணா அவர்கள் மாவட்டத்திற்கான இறுதிப் பட்டியலை வெளியிட்டார்.
இந்த புதிய தரவுகளின்படி, புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணத்தில் எத்தனை வாக்காளர்கள் உள்ளனர் என்று வாங்க பார்ப்போம்...
பாகம் வாரியாக வாக்காளர் விபரம்:
கோபாலப்பட்டிணத்தில் உள்ள நான்கு வாக்குச்சாவடி மையங்களின் (பாகம் எண்கள்) அடிப்படையில் வாக்காளர் எண்ணிக்கை பின்வருமாறு பிரிந்திருக்கிறது:
ஒட்டுமொத்த தொகுப்பு:
கோபாலப்பட்டிணம் பகுதியில் ஆண் வாக்காளர்களின் எண்ணிக்கை பெண் வாக்காளர்களை விட சற்றே அதிகமாக உள்ளது. ஒட்டுமொத்த வார்டு வாரியான புள்ளிவிவரங்கள் இதோ:
மொத்த ஆண்கள்: 1,943
மொத்த பெண்கள்: 1,937
மூன்றாம் பாலினம்: 0
மொத்த வாக்காளர்கள்: 3,880
தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, பொதுமக்கள் தங்கள் பெயர் மற்றும் விவரங்கள் பட்டியலில் சரியாக உள்ளதா என்பதை அந்தந்த வாக்குச்சாவடி மையங்கள் அல்லது இணையதளம் மற்றும் நமது GPM மீடியாவில் கொடுக்கப்பட்டுள்ள பட்டியலை பார்த்தும், டவுன்லோடு செய்து சரிபார்த்துக் கொள்ளலாம் என அறிவுறுத்தப்படுகிறது.

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.