ஆவுடையார்கோவில் அருகே மாட்டு வண்டி எல்கை பந்தயம் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு




ஆவுடையார்கோவில் அருகே மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

மாட்டு வண்டி பந்தயம்

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அருகே தாழனூர் பாரதி நகரில் சமயபுரத்து மாரியம்மன், ஜெய் ஆஞ்சநேயர் மற்றும் ஏழுமுக காளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் சந்தனக்காப்பு உற்சவத்தை முன்னிட்டு மாட்டுவண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. இதில் பெரியமாடு, நடுமாடு, பூஞ்சிட்டு மாடு என 3 பிரிவுகளாக பந்தயம் நடைபெற்றது. இதில் பெரிய மாடு பிரிவில் 9 ஜோடி மாட்டு வண்டிகளும், நடுமாடு பிரிவில் 10 ஜோடி மாட்டு வண்டிகளும், பூஞ்சிட்டு மாடு பிரிவில் 30 ஜோடி மாட்டு வண்டிகளும் கலந்து கொண்டனர்.

பரிசு

இதையடுத்து மாட்டு வண்டிகள் எல்கையை நோக்கி சீறிப்பாய்ந்து சென்றன. அப்போது அங்கு கூடியிருந்த பொதுமக்கள் கைத்தட்டி, விசில் அடித்து சாரதிகளை உற்சாகப்படுத்தினர். இதையடுத்து பந்தயத்தில் முதல் 3 இடங்களை பிடித்த மாட்டு வண்டி உரிமையாளர்களுக்கு ரொக்கம், கேடயம் பரிசாக வழங்கப்பட்டது.மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்ற சாலையில் இருபுறங்களிலும் திரளான பொதுமக்கள் திரண்டு நின்று கண்டு களித்தனர். பாதுகாப்பு பணியில் மீமிசல் போலீசார் ஈடுபட்டிருந்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments