ராணுவத்தில் அக்னிவீர் பணிக்கு இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்




புதுக்கோட்டை மாவட்டத்தில் ராணுவத்தில் அக்னிவீர் பணிக்கு இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் அருணா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

அக்னிவீர் பணிக்கு

இந்திய ராணுவம் அக்னிவீர் (பொதுப்பணி), அக்னிவீர் (டெக்னிக்கல்), அக்னிவீர் (கிளர்க், எஸ்.கே.டி), அக்னிவீர் (டிரேஸ்மேன்) உள்ளிட்ட பணியிடங்களுக்கு வருகிற 2027-ம் ஆண்டுக்கு ஆட்சேர்ப்பு நடைபெற உள்ளது. 17½ வயது முதல் 22 வயது வரை உள்ள திருமணமாகாத ஆண்கள் www.joinindianarmy.nic.in என்ற வலைதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இந்த பணியிடங்களுக்கு 8-ம் வகுப்பு தேர்ச்சி, 10-ம் வகுப்பு தேர்ச்சி, 12-ம் வகுப்பு தேர்ச்சி, என்.ஐ.ஓ.எஸ்., ஐ.டி.டி. தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். தற்போது தேர்வு எழுதுபவர்களும் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கலாம்

ஆன்லைன் மூலம் அடுத்த மாதம் (ஏப்ரல்) 1-ந்தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். விண்ணப்பித்தவர்களுக்கு ஆன்லைன் தேர்வு வருகிற ஜூன் மாதம் 1-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை நடைபெறும்.

எனவே, இந்திய ராணுவத்தில் சேவை புரிய தகுதியும், விருப்பமுடைய புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் மேற்காணும் இணையதள முகவரியில் பதிவு செய்து பயன்பெறலாம்.

மேலும் விவரங்களுக்கு திருச்சி ராணுவ ஆட்சேர்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments