நடுக்கடலில் அத்துமீறல்: ராமேசுவரம் விசைப்படகுகள் விரட்டியடிப்பு; 2 மீனவர்களை சிறைபிடித்த இலங்கை கடற்படை




நடுக்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த ராமேசுவரத்தை சேர்ந்த விசைப்படகுகளை விரட்டியடித்ததுடன், ஒரு படகை சிறைபிடித்து அதில் இருந்த 2 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது.

விரட்டியடிப்பு

ராமேசுவரத்தில் இருந்து நேற்று முன்தினம் 400-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2 ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்னர்.

இந்த மீனவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்தபோது அங்கு ரோந்து கப்பலில் இலங்கை கடற்படையினர் வந்தனர். பின்னர் அவர்கள், ராமேசுவரம் மீன்பிடி படகுகளை அத்துமீறி விரட்டியடித்தனர்.

2 மீனவர்கள் கைது

ராமேசுவரத்தை சேர்ந்த வரபிரசாதம் என்பவருக்கு சொந்தமான விசைப்படகை சிறைபிடித்து, அந்த படகில் இருந்த கான்ஸ்டன்(வயது 36), மினிட்டோ ராயப்பன்(40) ஆகிய 2 மீனவர்களை கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட விசைப்படகு மன்னார் கடற்படை முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டது. அதேபோல் மீனவர்கள் 2 பேரையும் அங்கு அழைத்துச்சென்று தீவிர விசாரணை நடத்தினர். அவர்களை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என 2 மீனவர்களின் குடும்பத்தினரும், மீனவ அமைப்புகளின் நிர்வாகிகளும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments