கோபாலப்பட்டிணம் ரஹ்மானியா பெண்கள் மதரசாவில் மாணவியர் சேர்க்கை ஆரம்பம்: நிர்வாகம் அழைப்பு!




கோபாலப்பட்டிணம் ரஹ்மானியா பெண்கள் மதரசாவில் புதிய கல்வி ஆண்டிற்கான மாணவியர் சேர்க்கை தற்போது நடைபெற்று வருகிறது. இது குறித்து மதரஸா நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,

பெண்களுக்கான உயரிய மார்க்கக் கல்வியை வழங்கி வரும் ரஹ்மானியா பெண்கள் மதரசாவில் கீழ்க்கண்ட படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன:

ஆலிமா பட்டயப் படிப்பு: முறையான ஆலிமா பாடத்திட்டத்தின் கீழ் மாணவிகள் சேர்க்கை நடைபெறுகிறது.

நாஸிஹா பட்டயப் படிப்பு: குடும்பப் பெண்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட, தேர்வு இல்லாத 3 வருட பாடத்திட்ட வகுப்புகள்.

காரியா மற்றும் ஹாஃபிளா வகுப்புகள்: திருக்குர்ஆனை மனனம் செய்யவும், தஜ்வீத் முறைப்படி ஓதவும் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி, பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை உடனடியாகப் பதிவு செய்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அல்லாஹ்வின் பேரருளைப் பெறவும், சிறந்த மார்க்கச் சூழலில் கல்வி பயிலவும் இந்தச் சேர்க்கை ஒரு நல்வாய்ப்பாகும்.

கூடுதல் விபரங்களுக்கும், முன்பதிவுக்கும் மதரஸா அலுவலகத்தை நேரில் தொடர்பு கொள்ளவும்.

எங்களுடன் இணைந்திருங்கள்

எங்களுடைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள பின்தொடருங்கள்:


Post a Comment

0 Comments