வேலைவாய்ப்பு பதிவு, புதுப்பித்தலுக்கு பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் கலெக்டர் தகவல்




வேலைவாய்ப்பு பதிவு, புதுப்பித்தல், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை, கூடுதல் பதிவு, முகவரி மாற்றம் உள்ளிட்ட அனைத்து பணிகளுக்கும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் இணையதளத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களால் எந்தவித கட்டணமின்றி வழங்கப்படுகிறது. மேலும் இந்த அனைத்து சேவைகளும் www.tnvelaivaaippu.gov.in என்ற இணையதளம் வாயிலாக மனுதாரர்கள் பதிவு செய்துகொள்ள வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் எவரும் போலி விளம்பரங்களையோ அல்லது இடைத்தரகர்களையோ நம்பி தனிப்பட்ட விவரங்களையோ அல்லது பணத்தையோ கொடுத்து ஏமாற வேண்டாம் என்று புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.
 

எங்களுடன் இணைந்திருங்கள்

எங்களுடைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள பின்தொடருங்கள்:


Post a Comment

0 Comments