புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காட்டு மாடு (காட்டெருமை) ஒன்றின் நடமாட்டம் கண்டறியப்பட்டுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், இன்று காலை முதல் வனத்துறை பணியாளர்கள் அப்பகுதியில் தொடர்ந்து தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
காட்டு மாட்டைப் பாதுகாப்பாக வனப்பகுதிக்குள் விரட்டும் பணிகளை வனத்துறையினர் மேற்கொண்டு வரும் நிலையில், பொதுமக்கள் யாரும் அநாவசியமாக பட்டாசுகள் வெடிக்கவோ அல்லது அதிக சத்தம் எழுப்பவோ வேண்டாம் என்று வனத்துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அதிக சத்தம் எழுப்பினால் விலங்கு மிரண்டு குடியிருப்புப் பகுதிக்குள் நுழைய வாய்ப்புள்ளதால் இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
வனத்துறையினர் மேற்கொண்டு வரும் அனைத்துப் பாதுகாப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்கும் பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு வனத்துறை அதிகாரிகள் அன்புடன் கேட்டுக் கொண்டுள்ளனர்.
எங்களுடன் இணைந்திருங்கள்
எங்களுடைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள பின்தொடருங்கள்:

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.