மணமேல்குடி அரசு மருத்துவமனையில் டாக்டர்கள், செவிலியர்கள் நியமிக்க வேண்டும் வர்த்தக நலச்சங்கத்தினர் கோரிக்கை



 

   
மணமேல்குடி வர்த்தக நலச்சங்கத்தினர் அமைச்சர் முகமது பர்வேசுக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளனா். அதில், மணமேல்குடி தாலுகா தலைமை அரசு மருத்துவமனையில் போதுமான டாக்டர்கள், செவிலியர்கள் கிடையாது. 24 மணிநேரமும் மருத்துவர்கள் இருந்து சிகிச்சை அளிக்கும் நிலை இல்லாததால் அடிக்கடி சாலையில் நடக்கும் விபத்துக்களுக்கு உடனடியாக அவசர சிகிச்சை அளிக்கும் வசதி இல்லாததால் முதலுதவி மட்டும் அளித்து அறந்தாங்கி, புதுக்கோட்டை மருத்துவமனைகளுக்கு அனுப்புகின்றனர். இதனால் விபத்தில் காயமடைந்தவர்களை உடனடி சிகிச்சைக்கு இங்கிருந்து பல கிலோமீட்டர் தூரம் கொண்டு செல்லும் போது உயிரிழப்பு ஏற்படுகிறது. எனவே தீவிர சிகிச்சை பிரிவும், 24 மணிநேரமும் டாக்டர்கள் சுழற்சி முறையில் பணியாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மணமேல்குடி கிழக்கு கடற்கரை சாலையை ஒட்டியுள்ள அம்மா பஸ் நிலையத்தில் குப்பைகளால் சுகாதாரம் இன்றி தூர்நாற்றம் வீசுவதால் அதனை சரிசெய்ய வேண்டும். மணமேல்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு நேரத்தில் தொடர் மின்வெட்டால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். மின்தடை ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வாசலில் உள்ள மின்கம்பம் மிகவும் பழுதடைந்துள்ளதை உடனடியாக மாற்ற வேண்டும். மணமேல்குடியில் பணிமனை அமைக்க வேண்டும். கிழக்கு கடற்கரைசாலை வழியாக செல்லும் கழிவுநீர் கால்வாய் திறந்தே கிடப்பதால் ஆடு, மாடுகள் உள்ளே விழுந்து விடுகிறது. எனவே இந்த கால்வாயை மூடி போட்டு மூட வேண்டும் என்று கூறியிருந்தனர்.
 

எங்களுடன் இணைந்திருங்கள்

எங்களுடைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள பின்தொடருங்கள்:


Post a Comment

0 Comments