ஆவுடையார்கோவில் ஒன்றியம் செங்கானம்- தென்னமாரி இணைப்பு சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
முக்கிய போக்குவரத்து
புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் ஒன்றியத்திற்குட்பட்ட செங்கானம் ஊராட்சியில் உள்ள செங்கானம் - தென்னமாரி இணைப்பு சாலை முற்றிலும் சேதமடைந்து போக்குவரத்திற்கு உபயோகம் இல்லாமல் மாறியுள்ளது.
கடந்த 2008-ம் ஆண்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் (100 நாள் வேலை வாய்ப்புத் திட்டம்) கீழ் இந்த செங்கானம் - தென்னமாரி இணைப்பு சாலை முதன்முதலாக அமைக்கப்பட்டது. கிராம மக்களின் முக்கிய போக்குவரத்து தேவையாக இருந்த இந்த சாலையை மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை அடுத்து, கடந்த 2020-ம் ஆண்டு இந்த சாலையை மேம்படுத்தும் பணி தொடங்கப்பட்டது. ஆனால், சாலையை மேம்படுத்துவதாகக் கூறி தார் சாலையாக மாற்றாமல், வெறும் மண்சாலையாக மட்டுமே மாற்றி பணிகளை அரைகுறையாக முடித்துள்ளனர்.
5 கிலோமீட்டர் தூரம் சுற்றி...
தற்போது இந்த 2 கிலோ மீட்டர் நீளமுள்ள சாலையில் பதிக்கப்பட்ட ஜல்லிக்கற்கள் அனைத்தும் பெயர்ந்து, ஆங்காங்கே சிதறிக் கிடக்கின்றன. இதனால் இந்த சாலையில் இருசக்கர வாகனங்கள் கூட பயணிக்க முடியாத அளவுக்கு மோசமடைந்துள்ளது. அவசரத்திற்கு ஒரு ஆம்புலன்ஸ் கூட உள்ளே வர முடியாத அவல நிலை உள்ளது." சாலை மோசமாக உள்ளதால், செங்கானம் மற்றும் தென்னமாரிமங்களம் கிராம மக்கள் தங்களின் அத்தியாவசிய தேவைகளுக்கு நேராக செல்ல முடியாமல், சுமார் 5 கிலோமீட்டர் தூரம் சுற்றி பயணிக்க வேண்டி உள்ளது.
கிராம ரேஷன் கடைக்கு வரக் கூடிய அத்தியாவசிய பொருட்கள் ஏற்றி வரும் வாகனங்கள் நீண்ட தூரம் சுற்றி வர வேண்டியுள்ளது. இதனால் பொருட்கள் வினியோகமும் தாமதமாகிறது. இந்த பகுதி விவசாய மக்கள் தங்களது விளைபொருட்களை சந்தைக்குக் கொண்டு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். வாகன ஓட்டிகள் இந்த பகுதிக்கு வர மறுப்பதால் கூடுதல் வாடகை தர வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது.
சீரமைக்க வேண்டும்
இதுகுறித்து தென்னமாரிமங்களம், செங்கானம் பொதுமக்கள் கூறுகையில், இந்த 2 கிலோ மீட்டர் சாலையை சீரமைக்க கோரி பலமுறை ஆவுடையார்கோவில் ஒன்றிய அலுவலகம், மாவட்ட கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் மனுக்கள் அளித்துவிட்டோம். அதிகாரிகள், விரைவில் சீர்செய்யப்படும் என வெறும் உறுதிமொழிகளை மட்டுமே தருகிறார்களே தவிர, இதுவரை எந்தவொரு களப்பணியும் நடக்கவில்லை. பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ள இந்த 2 கிலோ மீட்டர் இணைப்பு சாலையை உடனடியாக சீரமைத்து, தார் சாலையாகவோ அல்லது சிமெண்டு சாலையாகவோ தரம் உயர்த்தி தர நடவடிக்க எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
எங்களுடன் இணைந்திருங்கள்
எங்களுடைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள பின்தொடருங்கள்:

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.