புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் ஒன்றியம் நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி கோபாலப்பட்டிணம் காட்டுக்குளம் அருகே பழைய காலனி செல்லும் வழியில் தெருநாய் ஒன்று இறந்து பல நாட்களாக அப்புறப்படுத்தப்படாமல் உள்ளதால், அப்பகுதி முழுவதும் கடுமையான துர்நாற்றம் வீசி வருகிறது.
இதனால் அந்தப் பகுதியில் வசிப்பவர்கள், அவ்வழியே செல்லும் பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும், சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயமும் உருவாகியுள்ளது.
இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் தரப்பில் கூறுகையில்:
இறந்து கிடக்கும் நாயின் உடலிலிருந்து வீசும் துர்நாற்றத்தால் இந்த வழியாக மூக்கைப் பொத்திக்கொண்டு தான் செல்ல வேண்டியுள்ளது. இப்படியே விட்டால் தொற்றுநோய்கள் பரவ வாய்ப்புள்ளது.
எனவே, பொதுமக்களின் நலன் கருதி, சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் உடனடியாக தலையிட்டு, இறந்து கிடக்கும் நாயின் உடலை அப்புறப்படுத்தி அப்பகுதியில் கிருமிநாசினி தெளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எங்களுடன் இணைந்திருங்கள்
எங்களுடைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள பின்தொடருங்கள்:

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.