கோபாலப்பட்டிணத்தில் செப்.6-இல் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி: என்றும் உதவும் கரங்கள் அறக்கட்டளை ஏற்பாடு!



என்றும் உதவும் கரங்கள் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளை சார்பில் சிறப்பு மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி வரும் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 6, 2026) கோபாலப்பட்டிணத்தில் நடைபெறவுள்ளது.
கோபாலப்பட்டிணம் தங்க மஹால் மண்டபத்தில் மாலை 4:30 மணி முதல் 5:30 மணி வரை நடைபெறவுள்ள இந்நிகழ்ச்சிக்கு, கோபாலப்பட்டிணம் முஸ்லிம் ஜமாஅத் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் முன்னிலை வகிக்கின்றனர்.
நிகழ்ச்சியில், பிரபல மார்க்க பேச்சாளர் சகோதரர் செய்யது முஹம்மது பாஜி கலந்து கொண்டு, "இஸ்லாம் கூறும் கணவன் மனைவிக்கு இடையேயான கடமைகள்" எனும் தலைப்பில் சிறப்புரையாற்றவுள்ளார்.
இந்நிகழ்ச்சியில் பெண்கள் பங்கேற்று பயன்பெறும் வகையில் அவர்களுக்குத் தனி இடவசதி செய்யப்பட்டுள்ளதாக அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். பொதுமக்கள் அனைவரும் திரளாகக் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
 

எங்களுடன் இணைந்திருங்கள்

எங்களுடைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள பின்தொடருங்கள்:


Post a Comment

0 Comments