புதுக்கோட்டை மாவட்டம் மீமிசலில் வியாழக்கிழமை (03-09-2026) அன்று அதிகாலை 2 மணியளவில் கடைவீதி பகுதிகளில் தீ பற்றியதில் 10 க்கும் மேற்பட்ட கடைகள் முழுவதுமாக எரிந்து சாம்பலாகின.
இதில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலுள்ள பொருட்கள் எரிந்து மிகப்பெரிய இழப்பை சந்தித்துள்ளனர்.
இச்சம்பவத்தை அறிந்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகிகள் நேரடியாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று சேதமடைந்த கடைகளை பார்வையிட்டனர்.
மேலும் பாதிக்கப்பட்ட கடை உரிமையாளர்களை சந்தித்து, உரிய இழப்பீடு கிடைக்க தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் முயற்சி எடுக்கும் என்று ஆறுதல் கூறினர்.
இறுதியாக மீமிசல் வர்த்தக சங்கத் தலைவர் அபூபக்கர் அவர்களையும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் முஹம்மது மீரான், மாவட்டத் துணைச் செயலாளர்கள் முஹம்மது மஹ்தூம், சைபுல் கரீம் ஆகியோர் சந்தித்து பேசினர்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க அரசை TNTJ வலியுறுத்த வேண்டும் என மாவட்ட நிர்வாகிகளிடம் வர்த்தக சங்கத் தலைவர் அபூபக்கர் அவர்கள் கோரிக்கை வைத்தார்.
அதனை ஏற்று தமிழக அரசையும், அதிகாரிகளையும் கண்டிப்பாக உரிய இழப்பீடு கிடைக்க வலியுறுத்துவோம் TNTJ புதுகை மாவட்ட நிர்வாகிகள் கூறினர்.
இந்நிகழ்வின் போது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆர். புதுப்பட்டினம் மற்றும் கோபாலப்பட்டினம் நிர்வாகிகள் உடனிருந்தனர்.
எங்களுடன் இணைந்திருங்கள்
எங்களுடைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள பின்தொடருங்கள்:

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.