இஸ்லாம் மதத்துக்கு ஏன் மாறினார் குறளரசன்?- டி.ராஜேந்தர் விளக்கம்!!



தமிழ் சினிமாவின் பன்முக கலைஞரான டி.ராஜேந்தரின் இளையமகன் குறளரசன் இஸ்லாம் மதத்துக்கு மாறியதாகவும் அதற்கான சடங்குகள் நடந்த வீடியோ ஒன்று வைரலாகப் பரவி வந்தது. அதில்,குறளரசன் தன் தந்தை டி.ராஜேந்தர், தாய் உஷா முன்னிலையில் இஸ்லாம் மத பெரியோர்கள் சில வாசகத்தை வாசிக்க குறளும் வாசிக்கிறார்.

இதுகுறித்து டி ராஜேந்தர் கூறியதாவது, எம்மதமும் சம்மதம், ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற கொள்கையை பின்பற்றுபவன் நான். எம்மதமும் சம்மதம் என்ற கொள்ளையை பின்பற்றுவதால் மகனின் விருப்பத்துக்கு மதிப்புக் கொடுத்துள்ளேன்.  குறளரசனுக்கு சிறு வயதிலிருந்தே இஸ்லாம் மார்க்கத்தின் மீது நாட்டம் கொண்டிருந்தார். தற்போது, இஸ்லாத்தை முழுமையாக ஏற்றுக்கொண்டார். அண்ணா சாலையிலுள்ள மக்கா மசூதி ஜமாத்தார் முன்னிலையில் குறள் இஸ்லாத்துக்கு மாறினார். அவர் விருப்பத்துக்கேற்ப பெயர் ஒன்றை வைத்துக்கொள்ள ஜமாத்தில் கூறியுள்ளனர். நானும் அனைத்து மதத்துக்கும் பொதுவானவன். நான் நாகூர் தர்கா, வேளாங்கண்ணி கோயில், முருகன் கோயில் என அனைத்து ஸ்தலத்துக்கும் எனது தஞ்சை சினி ஆர்ட்ஸ் நிறுவனத்தின்  எம்ப்ளம் அனைத்து மதத்தின் குறியீடுகளும் கொண்டுதான் வடிவமைத்தேன்'' என்றார். 

மேலும் என் மூத்த மகன் சிம்பு சிவ பக்தர். மகள் இலக்கியா, கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றுகிறார். குரளரசன், இஸ்லாமை பின்பற்றுகிறார் என்றார்.

Post a Comment