புதுக்கோட்டையில் நாளை 08/03/2019 தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்



புதுக்கோட்டை மாவட்டத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.பி.உமா மகேஸ்வரி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் படித்து வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும் இளைஞர்களுக்கு தனியார் துறைகளில் பணியமர்த்தம் செய்யும் நோக்கோடு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் நடத்தும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற 08.03.2019 வெள்ளிக்கிழமை அன்று புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் காலை 10.30 மணி அளவில் நடைபெற உள்ளது.

இம்முகாமில் பல்வேறு தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர். இந்த தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு முதல் பட்டபடிப்பு வரை கல்வித் தகுதிகளையுடைய வேலைநாடுநர்கள் கலந்துகொள்ளலாம். இம்முகாமில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் கலந்துகொண்டு பயனடையலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.பி.உமா மகேஸ்வரி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments