மனித நேய மக்கள் கட்சியுடன் திமுக கூட்டணி பேச்சுவார்த்தைகளை ஏற்கனவே நடத்தியது. ஆனால், நாளடைவில் கூட்டணி பேச்சுவார்த்தை மற்றும் தொகுதி உடன்பாடுகளில் அவ்வளவாக அக்கறை காட்டப்படவில்லை என்றே சொல்லப்பட்டது.
ஆனால் இன்றைய தினம் தொகுதி பங்கீடு முடிவில், அக்கட்சிக்கு ஒரு தொகுதி கூட திமுக ஒதுக்கவில்லை. இதுகுறித்து மு.க.ஸ்டாலின் சொல்லும்போது, “மனித நேய மக்கள் கட்சி எங்களுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால், தொகுதிகள் ஒதுக்க முடியவில்லை. எங்களுக்கு ஆதரவளித்தால் பின் வரும் காலங்களில் அவர்களுக்கு வாய்ப்பளிக்கப்படும்” என்றார்
இப்போது, சட்டமன்ற தேர்தலில் இடம் ஒதுக்குவதாக திமுக சொல்லிவிட்டதால், அநேகமாக மனிதநேய மக்கள் கட்சி திமுகவிருந்து விலகும் என்றும், அணி மாறி டிடிவி தினகரனிடம் சேர வாய்ப்புள்ளதாகவும் ஒரு தகவல் வெளியானது. இந்நிலையில், தங்களுக்கு சீட் தராது வருத்தம் தருவதாக பேராசிரியர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார். இது சம்பந்தமாக செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் சொன்னதாவது:
“திமுகவிடம் சொந்த சின்னத்தில் போட்டியிட ஒரு இடம் கேட்டிருந்தோம். ஆனால் வேறு சின்னத்தில் போட்டியிடும் நிலை ஏற்பட்டது. இதனால் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினோம். இறுதியில் இடமில்லை என்று தெரிவித்துவிட்டனர்.
மனிதநேய மக்கள் கட்சிக்கு திமுக கூட்டணியில் ஒரு சீட் கூட தரப்படவில்லை. எதிர்காலத்தில் வாய்ப்புகள் தருவோம் என்று மு.க.ஸ்டாலின் கூறினார். திமுக கூட்டணியில் தங்களுக்கு சீட் தராது வருத்தம் தருகிறது. அதே நேரத்தில் வேறு சின்னத்தில் போட்டியிடுவது தேர்தல் ஆணைய விதிமுறைக்குப் புறம்பானது என நாங்கள் கருதுகிறோம்.
இந்த சூழ்நிலையில், தேர்தல் நிலைப்பாடு குறித்து முடிவெடுக்க அவசர தலைமை செயற்குழுக் கூட்டம் நடத்த உள்ளோம். மார்ச் 9ம் தேதி கூட்டம் நடைபெறும் இந்த கூட்டத்தில் எங்களது நிலைப்பாட்டை விரிவாக விவாதித்து எடுப்போம். பல்வேறு தரப்பிலிருந்தும் அழைப்புகள் வந்தவண்ணம் உள்ளன. அமமுகவுடன் கூட்டணி வைப்பது குறித்து தலைமை செயற்குழுவில் விவாதித்து முடிவெடுக்கப்படும்” என்று பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் கூறினார்.
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.