ஆசிய அளவில் நடைபெற்ற சிலம்பப் போட்டியில் வெற்றி பெற்று உலகளவில் நடைபெறவுள்ள போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார் புதுகை மாவட்டத்தைச் சேர்ந்த சிலம்பாட்ட வீரர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் ஆசிய அளவிலான 4 ஆவது சாம்பியன்சிப் சிலம்பப் போட்டி அண்மையில் நடைபெற்றது. இதில் இந்தியா, இலங்கை, மலேசியா, பங்களாதேஷ் உள்ளிட்ட 15 நாடுகளைச் சேர்ந்த சுமார் 250 வீரர்கள் கலந்து கொண்டனர்.
இதில், புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே உள்ள வேம்பங்குடி கிழக்கு கிராமத்தைச் சேர்ந்த பாஸ்கரன் மகன் வீரமணிகண்டன் பங்கேற்று 2 வெள்ளி, ஒரு வெண்கலம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்தார். இத்துடன், மலேசியாவில் டிசம்பரில் நடைபெற உள்ள உலக சாம்பியன்சிப் சிலம்பப் போட்டியில் கலந்து கொள்ளத் தகுதி பெற்றுள்ளார். இவர், கன்னியாகுமரியில் தெற்கு ஆசிய அளவில் நடைபெற்ற சிலம்பப் போட்டியில் தங்கப் பதக்கம் உள்பட பல்வேறு போட்டிகளில் பதக்கங்கள் பெற்றுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் ஆசிய அளவிலான 4 ஆவது சாம்பியன்சிப் சிலம்பப் போட்டி அண்மையில் நடைபெற்றது. இதில் இந்தியா, இலங்கை, மலேசியா, பங்களாதேஷ் உள்ளிட்ட 15 நாடுகளைச் சேர்ந்த சுமார் 250 வீரர்கள் கலந்து கொண்டனர்.
இதில், புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே உள்ள வேம்பங்குடி கிழக்கு கிராமத்தைச் சேர்ந்த பாஸ்கரன் மகன் வீரமணிகண்டன் பங்கேற்று 2 வெள்ளி, ஒரு வெண்கலம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்தார். இத்துடன், மலேசியாவில் டிசம்பரில் நடைபெற உள்ள உலக சாம்பியன்சிப் சிலம்பப் போட்டியில் கலந்து கொள்ளத் தகுதி பெற்றுள்ளார். இவர், கன்னியாகுமரியில் தெற்கு ஆசிய அளவில் நடைபெற்ற சிலம்பப் போட்டியில் தங்கப் பதக்கம் உள்பட பல்வேறு போட்டிகளில் பதக்கங்கள் பெற்றுள்ளார்.
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.