கோபாலப்பட்டினம் முழுவதும் உள்ள மதரஸாக்கள் நாளை திறப்பு



கோபாலப்பட்டினம் மதரஸாக்களுக்கு கடந்த ஏப்ரல் மாதம் 25-ந் தேதி முதல் நோன்பு கால விடுமுறை விடப்பட்டது. 50 நாட்கள் நோன்பு கால விடுமுறைக்கு பின்பு கோபாலப்பட்டினம் முழுவதும் நாளை மதரஸாக்கள் திறக்கப்பட உள்ளன.


இன்ஷா அல்லாஹ் கோபாலப்பட்டினத்தில் உள்ள அனைத்து ரஹ்மானியா குர்ஆன் மதரஸாக்கள் நாளை 15/06/2019 சனிக்கிழமை திறக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

அது சமயம் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை உரிய நேரத்தில் மதரஸாவிற்கு அனுப்பும்படி கேட்டுக் கொள்கிறோம்.

 குர்ஆன் மதரஸாக்கள் செயல்படும் நேரம் : 

காலை- 7.00 மணி முதல் 8.00 மணி வரை
மாலை- அஸர் தொழுகைக்கு பின் 5.30 மணி வரை

ஆண்கள் குர்ஆன் மதரஸாக்கள் செயல்படும் இடங்கள்:

  1. பெரியபள்ளிவசால் வளாகம்
  2. அவுலியா நகர் பள்ளிவாசல் வளாகம் 
  3. கடற்கரை பள்ளிவாசல் வளாகம்
  4. காட்டுகுளம் பள்ளிவாசல் வளாகம்

ரஹ்மானியா பெண்கள் மதரஸா 16/06/2019 ஞாயிற்றுக்கிழமை அன்று  திறக்கப்படும்.

பெண்கள் குர்ஆன் மதரஸாக்கள் செயல்படும் இடம்:

அரபா 1-வது தெரு 

கல்வி பற்றி நபிமொழி:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மனிதன் இறந்துவிட்டால் அவனுடைய மூன்று செயல்களைத் தவிர மற்ற அனைத்தும் நின்றுவிடுகின்றன; 1.நிலையான அறக்கொடை 2. பயன்பெறப்படும் கல்வி. 3. அவனுக்காகப் பிரார்த்திக்கும் (அவனுடைய) நல்ல குழந்தை. அறிவிப்பாளர்:அபூஹுரைரா (ரலி)  நூல்:ஸஹீஹ் முஸ்லிம்

தகவல்:
  உஸ்மான் ஆலிம் அவர்கள்

Post a Comment

0 Comments