மரண அறிவித்தல் (குவைத்தில்) :- அவுலியா நகரை சேர்ந்த ரிஸ்வான் அவர்கள்



கோபாலபட்டிணம் அவுலியா நகரைச் சேர்ந்த மர்ஹும் சுல்தான் (நெட்ட) அவர்களின் மகள் வழி பேரனும், கபீர் (சோனி) அவர்களின் அக்காள் மகனும்,அபுதாஹீர் அவர்களின் மகன் ரிஸ்வான் (23) அவர்கள் கடந்த 13/06/2019 வியாழக்கிழமை அன்று குவைத்தில் மாரடைப்பால் வபாத்தாகிவிட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

குவைத் வப்ரா பகுதியில் சமையல் வேலை செய்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் விரைவில் குவைத்தில்  நல்லடக்கம் செய்யப்பட இருக்கிறது.

மரணித்த ஒருவருக்கு தொழுகை நடக்கும் வரைக்கும் எவர் கலந்து கொள்கிறாரோ அவருக்கு ஒரு 'கிராத்' அளவு நன்மையும் அவர் அடக்கம் செய்யப்படும் வரைக்கும் கலந்து கொள்கிறாரோ அவருக்கு இரண்டு 'கிராத்' அளவு நன்மையும் கிடைக்கும். அதற்கு இரண்டு'கிராத்' என்றால் என்ன என வினவப்பட்டது. அதற்கு இரண்டு பெரிய மலைகளைப் போன்றதாகும்' என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: புகாரி, முஸ்லிம்.


''ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே தீரும், பின்னர் அனைவரும் என்னிடமே (இறைவனிடமே) மீளவேண்டியுள்ளது.'' (அல் குர் ஆன் 29 : 57)

Post a Comment

0 Comments