கோபாலப்பட்டினத்தில் மழை வேண்டி தொழுகை



தமிழகத்தில் நிலவிவரும் கடும் வரட்சியின் காரணமாக தண்ணீர் திண்டாட்டம் ஏற்பட்டு மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அன்றாட அத்தியாவசிய தண்ணீர் கூட கிடைக்காமல் இன்னல்களுக்கு ஆளாகியிருக்கின்றனர்.


இந்த இன்னல்கள் நீங்க படைத்த இறைவனிடம் மழை வேண்டி கோரிக்கை வைக்கும் சிறப்புப் பிரார்த்தனைகளை நபிகள் நாயகம் (ஸல் ﷺ) அவர்கள் கற்றுத் தந்திருக்கின்றார்கள். அதனை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தமிழகம் முழுவதும் கிளைகள் வாரியாக செய்துவருகின்றது.

அதன் ஓர் அம்சமாய்  புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா தவ்ஹீத் ஜமாஅத் கோபாலப்பட்டினம் கிளையின் சார்பாக மழை வேண்டி சிறப்புப் பிரார்த்தனை (மழைத் தொழுகை) (21.06.2019) அன்று காலை 7:00 மணிக்கு நடத்தப்பட்டது.

இதில்  மீரான் சேக்காதி அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள். பின்னர் மழை தொழுகை நடைபெற்றது.

ஆண்கள் பெண்கள் என பலர் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்தனர்.

அல்ஹம்துலில்லாஹ்.

மழைத் தொழுகையின் சட்டங்களை அறிய

https://onlinetntj.com/மாநபி-வழியில்-மழைத்-தொழு/15919/amp

-------------------------------------------------------

اللَّهُمَّ اسْقِنَا غَيْثًا مُغِيثًا مَرِيئًا مَرِيعًا نَافِعًا غَيْرَ ضَارٍّ عَاجِلًا غَيْرَ آجِلٍ

அல்லாஹும்மஸ்கினா கைஸன் முகீஸன் மரீஅன் மரீஅன் நாஃபிஅன் கைர ளார்ரின் ஆஜிலன் கைர ஆஜிலின்.

(இறைவா! தாமதமின்றி, விரைவான, இடரில்லாத, பயனளிக்கக் கூடிய, செழிப்பான, உயிரினத்திற்கு நற்பலன் தந்து காக்கும் மழையை எங்களுக்குத் தந்தருள்வாயாக!)

அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி)

நூல் : அபூதாவூத்

அன்புடன்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
கோபாலபட்டினம் கிளை, புதுக்கோட்டை மாவட்டம்
9976054882, 9865169445, 9095896425

தகவல் & GPM MEDIA செய்திகளுக்காக : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோபாலப்பட்டினம் கிளை நிர்வாகிகள்

Post a Comment

0 Comments