கத்தாரில் நடைபெற்ற மாதாந்திர தொடர் நிகழ்ச்சி!



இந்திய கத்தர் இஸ்லாமிய பேரவை (IQIC) (தமுமுக-மமக கத்தர் மண்டலம்) சார்பாக கடந்த 25.07.2019 வியாழக்கிழமை  மாதாந்திர நிகழ்ச்சி கத்தார் தலைநகர் தோகாவில் உள்ள  பின் முஹம்மது கிளையில்  நடைபெற்றது.

இந்த மாதாந்திர தொடர் நிகழ்ச்சியில் சகோதரர் முபாரக்  அவர்கள் இந்திய தேசத்தின் அவலநிலை என்ற தலைப்பிலும் மற்றும் மௌலவி நூருல்லாஹ் அவர்கள் நன்மையை ஏவுதலும் தீமையை தடுத்தலும்  என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

இதில் கோபாலப்பட்டினத்தை சேர்ந்த சகோதரர் அபுபக்கர் சித்திக் அவர்கள் மற்றும் கத்தார் வாழ் இந்திய சகோதரர்கள் கலந்து கொண்டனர்.

தகவல்:
இந்திய கத்தர் இஸ்லாமிய பேரவை (IQIC)
(தமுமுக-மமக கத்தர் மண்டலம்)
தோஹா
கத்தார்

Post a Comment

0 Comments