கோபாலப்பட்டினம் (NTF) சார்பில் ஆலோசனை கூட்டம் கடந்த 21 ஜூலை 2019 அன்று புதுக்கோட்டை மாவட்டம் மீமிசலை அடுத்த கோபாலபட்டிணம் நடுத்தெரு நம்பர்.462 இலக்கத்தில் வசிக்கும் சகோதரர்அமீர் அவர்களின் வீட்டில் தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பின் சார்பில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்ட கொள்கை சகோதரர்கள் நாம் ஏற்கனவே இணைந்து பயணித்து வந்த இயக்கத்தின் தற்கால நிலை, தவறான மார்க்க வழிகாட்டல்கள், தவறான ஃபாத்வாக்கள் போன்றவை பற்றியும் பொருளாதார விஷயத்தில் தெளிவின்மையை பற்றியும் அதிருப்தி தெரிவித்தனர்.
இந்த சந்திப்பிற்கு வருகை புரிந்திருந்த அதிரை தாஜுதீன் நாம் ஏற்கனவே பயணித்த ஜமாஅத்தின் முற்கால நிலை என்ன தற்கால நிலை என்ன?
நமது தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு ஏன் தொடங்கப்பட்டது?
அதன் அவசியம் ஏன் ஏற்பட்டது ?
இந்த கூட்டமைப்பின் நோக்கம் என்ன?
இதன் செயல்பாடுகள் எப்படி இருக்கும்?
சுதந்திரமான அமைப்பு என்று சொல்வதன் பொருள் என்ன?
போன்ற விபரங்களை சுருக்கமாக விளக்கினார்.
இந்த ஆலோசனை மற்றும் விளக்கங்களின் முடிவாக ...
கொள்கையில் சமரசமில்லாமல் செயல்பட வேண்டுமென்றால் நமது ஊரில் ஒரு பேரவையை உருவாக்கி செயல்படுவது என்று கொள்கை சகோதரர்கள் முடிவு செய்தனர்.
அதன்படி கோபாலபட்டிணம் தவ்ஹீத் பேரவை என்ற பெயரில் பேரவையை உருவாக்கி தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பில் இணைத்து செயல்படுவது என்று முடிவு செய்யப்பட்டு நிர்வாகிகள் அமைக்கப்பட்டனர் .
தலைவராக சகோதரர் A.அமீர் [9788502525] அவர்களையும்,
செயலாளராக சகோதரர் N.S. ஷாஹுல் ஹமீது [7639934561] அவர்களையும்,
பொருளாளராக சகோதரர் A.செய்யது அபுதாஹிர் [9524502269] அவர்களையும்,
துணை தலைவராக M.முகம்மது ஃபாருக் [7373921535] அவர்களையும்,
துணை செயலாளராக I .சித்திக் ரஹ்மான் [9976087787]அவர்களையும் நியமிக்கப்பட்டது .
தனிநபர் தாவா, பெண்கள் பயான் , தெருமுனைப்பிரச்சாரம் போன்ற தாவாக்களை முன்பைவிட வீரியத்துடன் செயல்படுத்துவது என்றும் சமூகநல பணிகளையும் தொய்வின்றி செய்வது என்றும் வரும் ஆகஸ்ட் 2 வெள்ளிக்கிழமை முதல் ஜும்ஆ தொடங்குவது என்றும் முடிவு செய்யப்பட்டது.
இந்த நிகழ்வுக்கு NTF ன் மாநில செயலாளர் அதிரை தாஜுதீனுடன் மாநில பிரதிநிதிகளான சம்பை சாதிக் , அறந்தை ஜியாவுதீன் ,அரசர்குளம் இப்ராஹிம் மற்றும் அதிரை கிளை தலைவர் பீர் முஹம்மது செயலாளர் சேக் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
தகவல் & GPM MEDIA செய்திகளுக்காக : அமீர்
இதில் கலந்துகொண்ட கொள்கை சகோதரர்கள் நாம் ஏற்கனவே இணைந்து பயணித்து வந்த இயக்கத்தின் தற்கால நிலை, தவறான மார்க்க வழிகாட்டல்கள், தவறான ஃபாத்வாக்கள் போன்றவை பற்றியும் பொருளாதார விஷயத்தில் தெளிவின்மையை பற்றியும் அதிருப்தி தெரிவித்தனர்.
இந்த சந்திப்பிற்கு வருகை புரிந்திருந்த அதிரை தாஜுதீன் நாம் ஏற்கனவே பயணித்த ஜமாஅத்தின் முற்கால நிலை என்ன தற்கால நிலை என்ன?
நமது தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு ஏன் தொடங்கப்பட்டது?
அதன் அவசியம் ஏன் ஏற்பட்டது ?
இந்த கூட்டமைப்பின் நோக்கம் என்ன?
இதன் செயல்பாடுகள் எப்படி இருக்கும்?
சுதந்திரமான அமைப்பு என்று சொல்வதன் பொருள் என்ன?
போன்ற விபரங்களை சுருக்கமாக விளக்கினார்.
இந்த ஆலோசனை மற்றும் விளக்கங்களின் முடிவாக ...
கொள்கையில் சமரசமில்லாமல் செயல்பட வேண்டுமென்றால் நமது ஊரில் ஒரு பேரவையை உருவாக்கி செயல்படுவது என்று கொள்கை சகோதரர்கள் முடிவு செய்தனர்.
அதன்படி கோபாலபட்டிணம் தவ்ஹீத் பேரவை என்ற பெயரில் பேரவையை உருவாக்கி தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பில் இணைத்து செயல்படுவது என்று முடிவு செய்யப்பட்டு நிர்வாகிகள் அமைக்கப்பட்டனர் .
தலைவராக சகோதரர் A.அமீர் [9788502525] அவர்களையும்,
செயலாளராக சகோதரர் N.S. ஷாஹுல் ஹமீது [7639934561] அவர்களையும்,
பொருளாளராக சகோதரர் A.செய்யது அபுதாஹிர் [9524502269] அவர்களையும்,
துணை தலைவராக M.முகம்மது ஃபாருக் [7373921535] அவர்களையும்,
துணை செயலாளராக I .சித்திக் ரஹ்மான் [9976087787]அவர்களையும் நியமிக்கப்பட்டது .
தனிநபர் தாவா, பெண்கள் பயான் , தெருமுனைப்பிரச்சாரம் போன்ற தாவாக்களை முன்பைவிட வீரியத்துடன் செயல்படுத்துவது என்றும் சமூகநல பணிகளையும் தொய்வின்றி செய்வது என்றும் வரும் ஆகஸ்ட் 2 வெள்ளிக்கிழமை முதல் ஜும்ஆ தொடங்குவது என்றும் முடிவு செய்யப்பட்டது.
இந்த நிகழ்வுக்கு NTF ன் மாநில செயலாளர் அதிரை தாஜுதீனுடன் மாநில பிரதிநிதிகளான சம்பை சாதிக் , அறந்தை ஜியாவுதீன் ,அரசர்குளம் இப்ராஹிம் மற்றும் அதிரை கிளை தலைவர் பீர் முஹம்மது செயலாளர் சேக் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
தகவல் & GPM MEDIA செய்திகளுக்காக : அமீர்
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.