புதுக்கோட்டை அரசு போக்குவரத்து கழகத்தை சேர்ந்த அரசு பஸ் புதுக்கோட்டை புதிய பஸ் நிலையத்தில் இருந்து பட்டுக்கோட்டைக்கு நேற்று முன்தினம் மதியம் புறப்பட்டு சென்றது.
இந்த பஸ்சை ஓட்டிய டிரைவர் ஆலங்குடியில் இருந்து புளிச்சங்காடு கைகாட்டியை கடந்தும் சுமார் 20 கிலோமீட்டர் தூரம் வரை செல்போனில் வாட்ஸ்- அப்பை பார்த்தபடியே சென்றதாக தெரிகிறது.
இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் உமா மகேஸ்வரி செல்போனில் வாட்ஸ்- அப்பை பார்த்தபடியே பஸ்சை ஓட்டிய புதுக்கோட்டை மண்டலத்தை சேர்ந்த அரசு டிரைவர் மூக்கையாவை பணியிடை நீக்கம் செய்ய உத்தரவிட்டார்.
இதுகுறித்து கலெக்டர் உமா மகேஸ்வரி கூறுகையில், ‘பயணிகள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பஸ் டிவைர்கள் பணி நேரத்தில் கண்டிப்பாக செல்போன்கள் பயன்படுத்த கூடாது. இதனை மீறி செல்போன் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறாமல் இருக்க தொடர்புடைய அலுவலர்கள், டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்களுக்கு தக்க அறிவுரை வழங்க வேண்டும் என்றார். கலெக்டரின் உத்தரவை தொடர்ந்து பஸ் டிரைவர் மூக்கையா பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
இந்த பஸ்சை ஓட்டிய டிரைவர் ஆலங்குடியில் இருந்து புளிச்சங்காடு கைகாட்டியை கடந்தும் சுமார் 20 கிலோமீட்டர் தூரம் வரை செல்போனில் வாட்ஸ்- அப்பை பார்த்தபடியே சென்றதாக தெரிகிறது.
இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் உமா மகேஸ்வரி செல்போனில் வாட்ஸ்- அப்பை பார்த்தபடியே பஸ்சை ஓட்டிய புதுக்கோட்டை மண்டலத்தை சேர்ந்த அரசு டிரைவர் மூக்கையாவை பணியிடை நீக்கம் செய்ய உத்தரவிட்டார்.
இதுகுறித்து கலெக்டர் உமா மகேஸ்வரி கூறுகையில், ‘பயணிகள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பஸ் டிவைர்கள் பணி நேரத்தில் கண்டிப்பாக செல்போன்கள் பயன்படுத்த கூடாது. இதனை மீறி செல்போன் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறாமல் இருக்க தொடர்புடைய அலுவலர்கள், டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்களுக்கு தக்க அறிவுரை வழங்க வேண்டும் என்றார். கலெக்டரின் உத்தரவை தொடர்ந்து பஸ் டிரைவர் மூக்கையா பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.