மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில்மனுக்கள் பெற்ற 2 மணிநேரத்தில் 5 பயனாளிகளுக்கு ரூ.30 ஆயிரம்மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி பி.உமாமகேஸ்வரி அவர்கள் வழங்கினார்.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான
சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. பி.உமாமகேஸ்வரி. இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நேற்று (07.08.2019) நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள்
மாற்றுத்திறனாளிகளிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்று,
நலத்திட்ட உதவிகளை வழங்கி தெரிவித்தாவது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளின்
கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில்
பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில்
மாற்றுத்திறனாளிகளின் குறைகளை போக்கும் வகையில் ஒவ்வொரு மாதமும் முதல் புதன்கிழமை மாவட்ட ஆட்சியரகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் இன்றைய தினம் மாவட்ட ஆட்சியரகத்தில்
மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் முதல் கூட்டம்
நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து மாதந்திர
உதவித்தொகை வழங்கக்கோரியும், விலையில்லா வெள்ளாடுகள், விலையில்லா கறவைமாடுகள் வழங்குதல், பசுமை வீடு வழங்குதல், சுயதொழில் தொடங்க மானிய கடன், மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை போன்ற பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 75 மனுக்கள் பெறப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர்
திருமதி.பி.உமாமகேஸ்வரி அவர்கள் தெரிவித்தார்.
முன்னதாக இன்றைய தினம் நடைபெற்ற இக்கூட்டத்தில்
மாற்றுத்திறனாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெற்ற மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் 2 மணிநேரங்களுக்குள்ளாகவே தகுதி உடைய 4
மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.22,300 மதிப்பீட்டில் காதொலிக்கருவிகளும், ஒரு
மாற்றுத்திறனாளிக்கு ரூ.7,500 மதிப்பீட்டில் வீல்சேரும் என மொத்தம் 5
மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.30 ஆயிரம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை
வழங்கினார்கள்.
அத்தகைய விரைவான நடவடிக்கைகளுக்கு மாற்றுத்திறனாளிகள் மாவட்ட ஆட்சியருக்கு நன்றியினை தெரிவித்தார்கள். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலஅலுவலர் (பொ) ரவிச்சந்திரன், சமூக பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியர் கிருஷ்ணன், இளநிலை மறுவாழ்வு அலுவலர் வசந்தராமகுமார் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான
சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. பி.உமாமகேஸ்வரி. இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நேற்று (07.08.2019) நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள்
மாற்றுத்திறனாளிகளிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்று,
நலத்திட்ட உதவிகளை வழங்கி தெரிவித்தாவது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளின்
கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில்
பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில்
மாற்றுத்திறனாளிகளின் குறைகளை போக்கும் வகையில் ஒவ்வொரு மாதமும் முதல் புதன்கிழமை மாவட்ட ஆட்சியரகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் இன்றைய தினம் மாவட்ட ஆட்சியரகத்தில்
மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் முதல் கூட்டம்
நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து மாதந்திர
உதவித்தொகை வழங்கக்கோரியும், விலையில்லா வெள்ளாடுகள், விலையில்லா கறவைமாடுகள் வழங்குதல், பசுமை வீடு வழங்குதல், சுயதொழில் தொடங்க மானிய கடன், மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை போன்ற பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 75 மனுக்கள் பெறப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர்
திருமதி.பி.உமாமகேஸ்வரி அவர்கள் தெரிவித்தார்.
முன்னதாக இன்றைய தினம் நடைபெற்ற இக்கூட்டத்தில்
மாற்றுத்திறனாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெற்ற மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் 2 மணிநேரங்களுக்குள்ளாகவே தகுதி உடைய 4
மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.22,300 மதிப்பீட்டில் காதொலிக்கருவிகளும், ஒரு
மாற்றுத்திறனாளிக்கு ரூ.7,500 மதிப்பீட்டில் வீல்சேரும் என மொத்தம் 5
மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.30 ஆயிரம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை
வழங்கினார்கள்.
அத்தகைய விரைவான நடவடிக்கைகளுக்கு மாற்றுத்திறனாளிகள் மாவட்ட ஆட்சியருக்கு நன்றியினை தெரிவித்தார்கள். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலஅலுவலர் (பொ) ரவிச்சந்திரன், சமூக பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியர் கிருஷ்ணன், இளநிலை மறுவாழ்வு அலுவலர் வசந்தராமகுமார் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.